Press "Enter" to skip to content

இந்திய ரயில்வே துறை மற்றும் தபால் துறை இணைந்து துவங்கியுள்ள, புதிய பார்சல் சேவை குறித்த ஆலோசனைக் கூட்டம் கோவை அவிநாசி சாலையில் உள்ள சேம்பர் டவர்ஸ் அரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், ரயில்வே மற்றும் தபால்துறையின் உயர் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.இந்நிகழ்வில், ரயில்வே வாரியத்தின், நிர்வாக இயக்குனர் சத்தியகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது, கடந்த பட்ஜெட் அறிவிப்பின்போது ரயில்வே மற்றும் தபால்…

இலவச பேருந்துகளில் வேண்டுமென்றே அரசு பெயரை கெடுக்க, 100க்கு 99 சதவீதம் தவறாக சித்தரிக்கின்றனர் – கோவையில் சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் ராஜா பேட்டி.

தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் ராஜா தலைமையில், ஆட்சியர் சமீரன் முன்னிலையில், இக்குழுவின் உறுப்பினர்கள் கோவையில் உள்ள பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். அதன் படி ஹோப் காலேஜ் தொழில்நுட்ப…

விலைவாசி அதிகரிப்பை கண்டித்து, கோவையில் மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

மின்சார வரி உயர்வு, பால் விலை மற்றும் சொத்துவரி உயர்வைக் கண்டித்து, கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு இந்திய தேசிய மாதர் சம்மேளனத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மின்சார வரி உயர்வு, பால் விலை…

இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, விவசாயிகள் சங்கம் ஆர்ப்பட்டம்!

கோவையில் இனாமாக கொடுக்கப்பட்ட நிலங்களை கையகப்படுத்தும் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தை கண்டித்து, அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் சொத்துக்கள்…

காவலர் கொல்லப்பட்ட தினம், மாநகரப் பகுதியில் போலீசார் தீவிர சோதனை…!

கோவையில் போலீஸ் செல்வராஜ், 19 இஸ்லாமியர்கள் இறந்த தினம் மற்றும் டிசம்பர் 6 போன்ற நிகழ்வுகளை முன்னிட்டு, மாநகரத்தின் முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கோவையில் கடந்த 1997 ஆம் ஆண்டு,…

கோவையில் தனியார் மாலில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில், குக்வித் கோமாளி புகழ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்..!

இந்நிகழ்ச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கோவை மக்களுக்காக எப்போது அழைத்தாலும் வருவேன் என தெரிவித்தார். திரையுலகை பொருத்தவரை ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் 1947 என்ற படத்தில் நடித்து வருவதாகவும், தொடர்ந்து பல்வேறு படங்கள் திரைக்கு வர…

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கோவை மாநகர் மாவட்டம் சார்பாக நடைபெற்ற மெகா இரத்ததான முகாமில், பெண்கள் உட்பட நூறுக்கும் மேற்பட்டோர் இரத்ததானம் செய்தனர்…!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கோவை மாநகர் மாவட்டம் சார்பாக தீவிரவாதத்திற்கு எதிரான தீவிர பிரச்சாரத்தை முன்னிட்டு, கோவையில் மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது .உக்கடம் பிலால் நகர் பகுதியில் உள்ள தவ்ஹீத் ஜமாத் பள்ளி…

கோவையில், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் பேட்டி..!

கோவை காளப்பட்டி பகுதியில் உள்ள சுகுணா பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் கலந்து கொண்டு, பட்டங்களை வழங்கினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த…

உலக மலையாளிகள் பேரவை கோயமுத்தூர் கிளை சார்பாக, ஜோதிர்ஹமயா ஃபேஸ் 2 கண்தான முகாம் துவக்க விழா கோவையில் நடைபெற்றது…!

கடந்த 2004 ஆம் ஆண்டு உலக மலையாளிகள் பேரவை சென்னை கிளை சார்பாக, ஜோதிர்ஹமயா எனும் கண் தானம் திட்டம் துவங்கப்பட்டு, இதன் வாயிலாக சுமார் மூன்று இலட்சத்திற்கும் அதிகமானோர் கண் தானம் செய்ய…

கோவை காரமடை குட் ஷெப்பர்ட் தொண்டு நிறுவனம் சார்பாக, பாலின நீதிக்கான சமூகத் தடைகளை நீக்குவது குறித்த 2 நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது…!

கோவையை அடுத்த, காரமடை குட் ஷெப்பர்ட் தொண்டு நிறுவனம் சார்பில் பாலின நீதிக்கான சமூகத் தடைகளை நீக்குவதற்கான இரண்டு நாள் பயிற்சி முகாம், கோவை ஜீவன் ஜோதி பயிற்சி மையத்தில் நடைபெற்றது. இரண்டு நாள்…

Enable Notifications    OK No thanks