அண்ணா பல்கலைக்கழகத்தில் விருப்பப் பாடங்களாக 8 பாடங்கள் இருந்து வந்த நிலையில் இந்த கல்வியாண்டு முதல் ஒன்பதாவது பாடமாக தமிழும் சேர்க்கப்படுகிறது மாணவர்கள் விருப்ப மொழியாக தமிழ் மொழியை தேர்வு செய்துகொள்ளலாம் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்
சென்னை தலைமைச் செயலகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது, இந்த கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் பொன்முடி கூறியதாவது.
”பேராசிரியர் நியமனங்களில் முறைகேடுகள் நடந்ததாக சில பல்கலைக்கழகங்கள் மீது புகார்கள் வந்துள்ளது சேலத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழகம்,காமராஜர் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் இதனை ஆராய ஐ.ஏ.எஸ் குழு ஒன்று அமைக்கப்பட்டு புகார்கள் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க தமிழக அரசு ஏற்பாடு செய்யும்.
பொறியியல் சேர்க்கை குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது மேலும் முதல்வரிடம் கலந்து பேசிய பிறகு அறிவிக்கப்படும்
9ஆம் வகுப்பு பொதுத்தேர்வின் மதிப்பெண் அடிப்படையில் 11 ஆம் வகுப்பு மற்றும் பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை நடைபெறும்
அண்ணா பல்கலைக்கழகத்தில் விருப்பப் பாடங்களாக 8 பாடங்கள் இருந்து வந்த நிலையில் இந்த கல்வியாண்டு முதல் ஒன்பதாவது பாடமாக தமிழும் சேர்க்கப்படுகிறது மாணவர்கள் விருப்ப மொழியாக தமிழ் மொழியை தேர்வு செய்துகொள்ளலாம்” என்றார்.
Be First to Comment