கோவை மாநகராட்சி தெற்கு மண்டல கூட்டம் இன்று மாலை 3 மணிக்கு நடக்கவுள்ளதாக தெற்கு மண்டலத்திற்குட்பட்ட மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மாலை 3 மணியளவில் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் கூட்டம் நடக்கும் அரங்கத்திற்கு வந்திருந்தனர். ஆனால் 4.30 மணி கடந்த கூட்டத்திற்கு வர வேண்டிய தலைமை பொறுப்பு வகிக்கும் முக்கிய நபர் வரவில்லை. இதனால் கடுப்பான சில மாமன்ற உறுப்பினர்கள் அங்கிருந்து கிளம்பி விட்டனர். அதிகாரிகளோ கைபிசைந்தவாறு அதிருப்தியில் காத்திருந்தனர்.
தலைமை பொறுப்பு வகிக்கும் முக்கிய நபர் சாவகாசமாக வந்ததும், இருக்கின்ற மாமன்ற உறுப்பினர்களை வைத்து கூட்டம் நடந்தது. அறிவிக்கப்பட்ட நேரத்தை கடந்து கூட்டத்தில் பங்கேற்க சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக காத்திருப்பதா? கட்சி கூட்டத்திற்கு தொண்டர்களை காத்திருக்க வைப்பது போல மண்டல கூட்டத்திற்கும் எங்ககளை காத்திருக்க வைப்பதா? என அதிருப்தியில் உள்ளனர் அதிகாரிகள்.
வரும் காலத்தில் மாற்றிக் கொள்வார்களா சம்பந்தப்பட்டவர்கள்?

அதிருப்தியில் தெற்கு மண்டல அதிகாரிகள்…
More from கோவை செய்திகள்More posts in கோவை செய்திகள் »
- இந்திய ரயில்வே துறை மற்றும் தபால் துறை இணைந்து துவங்கியுள்ள, புதிய பார்சல் சேவை குறித்த ஆலோசனைக் கூட்டம் கோவை அவிநாசி சாலையில் உள்ள சேம்பர் டவர்ஸ் அரங்கில் நடைபெற்றது.
- இலவச பேருந்துகளில் வேண்டுமென்றே அரசு பெயரை கெடுக்க, 100க்கு 99 சதவீதம் தவறாக சித்தரிக்கின்றனர் – கோவையில் சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் ராஜா பேட்டி.
- விலைவாசி அதிகரிப்பை கண்டித்து, கோவையில் மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்!
- இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, விவசாயிகள் சங்கம் ஆர்ப்பட்டம்!
- காவலர் கொல்லப்பட்ட தினம், மாநகரப் பகுதியில் போலீசார் தீவிர சோதனை…!
Be First to Comment