தமிழக சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை ஆனது மே2 ம் தேதி நடைபெற உள்ள நிலையில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் பணியாற்ற இருக்கும் அரசு பணியாளர்கள் மையத்துக்குள் இருக்கக்கூடிய கட்சி முகவர்கள் காவலர்கள் மற்றும் இதர பணியாளர்கள் அனைவரும் கட்டாயம் 72 மணி நேரத்திற்கு முன்பு கொரோனா பரிசோதனை செய்து இருக்க வேண்டும் அல்லது முதல் கட்ட தடுப்பூசி செலுத்தி கொண்டிருக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று முதல் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் பணியாற்ற இருக்கக்கூடிய அரசு பணியாளர்கள் கட்சி முகவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக கோவையிலும் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு செல்லக்கூடிய அரசு பணியாளர்கள் கட்சி முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோவையில் உள்ள 10 தொகுதிகளில் இருந்தும் செல்ல கூடிய அனைவருக்கும் இந்த பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

அரசு பணியாளர்கள் மற்றும் கட்சி முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை.
More from கோவை செய்திகள்More posts in கோவை செய்திகள் »
- இந்திய ரயில்வே துறை மற்றும் தபால் துறை இணைந்து துவங்கியுள்ள, புதிய பார்சல் சேவை குறித்த ஆலோசனைக் கூட்டம் கோவை அவிநாசி சாலையில் உள்ள சேம்பர் டவர்ஸ் அரங்கில் நடைபெற்றது.
- இலவச பேருந்துகளில் வேண்டுமென்றே அரசு பெயரை கெடுக்க, 100க்கு 99 சதவீதம் தவறாக சித்தரிக்கின்றனர் – கோவையில் சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் ராஜா பேட்டி.
- விலைவாசி அதிகரிப்பை கண்டித்து, கோவையில் மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்!
- இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, விவசாயிகள் சங்கம் ஆர்ப்பட்டம்!
- காவலர் கொல்லப்பட்ட தினம், மாநகரப் பகுதியில் போலீசார் தீவிர சோதனை…!
Be First to Comment