ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகளுக்கு இடைக்கால தடையை வனத்துறையினர் விதித்திருந்தனர்.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் தொற்று குறைந்த உள்ள நிலையில் தமிழக அரசு சில தளர்வுகளுடன் ஆணை பிறப்பித்து நடைமுறையில் உள்ளது.
பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட டாப்சிலிப், வால்பாறையில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான சுற்றுலாத்தலங்கள், குரங்கு நீர் வீழ்ச்சி தடை அமுலில் இருந்து வந்தது.
இதையடுத்து மத்திய மாநில அரசுகள் ஒப்புதலோடு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறையினர் தெரிவித்தனர், மேலும் வால்பாறை செல்லும் வழியில் வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளதால் சுற்றுலா பயணிகள் வனப்பகுதிகுள் அனுமதியின்றி செல்லக் கூடாது, மது மற்றும் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது என சோதனைச் சாவடிகளில் சுற்றுலா பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு அனுமதி அளிக்கப்படும் என தெரிவித்தனர்.
மேலும் டாப்சிலிப்பில் சுற்றுலா பயணிகள் டிரக்கிங், யானை சவாரி ரத்து, கோழிகமுத்தி யானைகள் வளர்ப்பு முகாம் மட்டும் அனுமதி, வனத்துறை சார்பில் சுற்றுலா வனப்பகுதிகுள் சுற்றுலா பயணிகள் கடைபிடிக்க 30 உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்ட பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டுள்ளது என வனச்சரகர் தகவல் தெரிவித்தார்.

ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் அனுமதி
More from கோவை செய்திகள்More posts in கோவை செய்திகள் »
- இந்திய ரயில்வே துறை மற்றும் தபால் துறை இணைந்து துவங்கியுள்ள, புதிய பார்சல் சேவை குறித்த ஆலோசனைக் கூட்டம் கோவை அவிநாசி சாலையில் உள்ள சேம்பர் டவர்ஸ் அரங்கில் நடைபெற்றது.
- இலவச பேருந்துகளில் வேண்டுமென்றே அரசு பெயரை கெடுக்க, 100க்கு 99 சதவீதம் தவறாக சித்தரிக்கின்றனர் – கோவையில் சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் ராஜா பேட்டி.
- விலைவாசி அதிகரிப்பை கண்டித்து, கோவையில் மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்!
- இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, விவசாயிகள் சங்கம் ஆர்ப்பட்டம்!
- காவலர் கொல்லப்பட்ட தினம், மாநகரப் பகுதியில் போலீசார் தீவிர சோதனை…!
Be First to Comment