கொங்குநாடு மக்கள் கட்சி ஈஸ்வரனுக்கு கண்டனம் தெரிவித்து அர்ஜுன் சம்பத் அறிக்கை வெளியிட்டுள்ளார் அதில் அவர் கூறியிருப்பதாவது, ” கொங்குநாடு மக்கள் கட்சி தலைவர் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் ஜெய்ஹிந்த் கோஷம் கவர்னர் உரையின் நிறைவில் இல்லை. எனவே தி.மு.க ஜெய்ஹிந்த் கோசத்தை தவிர்ப்பதன் மூலம் தி.மு.க தமிழகத்தை முன்னிறுத்தி இருக்கின்றது என்று சட்டசபையில் பேசியுள்ளார். அவரது பேச்சை முதலமைச்சர் மறுத்து, எதிர்த்து,கருத்து தெரிவிக்கவில்லை!
ஜெய்ஹிந்த் முழக்கத்தை உருவாக்கியவர் டாக்டர் செண்பகராமன் பிள்ளை என்கின்ற தமிழர்தான். இந்திய நாட்டின் விடுதலைக்காக ஜெய்ஹிந்த் செண்பகராமன் பிள்ளை செய்த தியாகமும், சேவையும் அளவிடற்கரியது. எது எப்படியோ போகட்டும் ஈஸ்வரன் டாக்டர் ஜெய்ஹிந்த் செண்பகராமன் அவர்களைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.
தி.மு.க-வை திருப்திப்படுத்த வேண்டும். முதல்வர் மு.கஸ்டாலின் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்பதற்காக ஈஸ்வரன் இப்படி பேசியிருக்கிறார் என்று கருதுகிறேன்! இப்படியான பேச்சுக்கள் காக்காய் பிடிக்கும் பேச்சுக்கள்! அரசியலில் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்காக பேசக்கூடிய பேச்சுக்கள்! சந்தர்ப்பவாத பேச்சுக்கள்! என்றுதான் நான் கருதுகின்றேன்.
இருந்தபோதிலும் செண்பகராமன் பிள்ளையால் உருவாக்கப்பட்ட ஜெய்ஹிந்த் முழக்கம் நேதாஜியால் முத்துராமலிங்கத் தேவரால் தமிழகத்தில் உள்ள அனைத்து தேசபக்தர்களாலும் உச்சரிக்கப்பட்ட எழுச்சிமிகு கோஷம்! ஈஸ்வரன் அவர்களே, இந்த வரலாறு உங்களுக்குத் தெரியும், இருந்தாலும் தி.மு.க சகவாசம் உங்களை இப்படி எல்லாம் பேச வைக்கிறது.
ஈஸ்வரனின் பேச்சு கண்டிக்கத்தக்கது. ஜெய்ஹிந்த் முழக்கம் கவர்னர் உரையில் இடம்பெறாதது ஒரு தற்செயல் நிகழ்வுதான் நாம் கருதி கொண்டிருந்தோம். ஆனால் இதன் பின்னாலும் இந்து விரோத, இந்திய விரோத, பிரிவினைவாத சிந்தனை உள்ளது என்பது கொங்குநாடு ஈஸ்வரன் பேச்சின் மூலம் தெளிவாகிறது. முதல்வர் ஸ்டாலின் இதனைத் தெளிவுப்படுத்த வேண்டும்.” என தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

ஈஸ்வரனுக்கு அர்ஜுன் சம்பத் கண்டனம்
More from கோவை செய்திகள்More posts in கோவை செய்திகள் »
- இந்திய ரயில்வே துறை மற்றும் தபால் துறை இணைந்து துவங்கியுள்ள, புதிய பார்சல் சேவை குறித்த ஆலோசனைக் கூட்டம் கோவை அவிநாசி சாலையில் உள்ள சேம்பர் டவர்ஸ் அரங்கில் நடைபெற்றது.
- இலவச பேருந்துகளில் வேண்டுமென்றே அரசு பெயரை கெடுக்க, 100க்கு 99 சதவீதம் தவறாக சித்தரிக்கின்றனர் – கோவையில் சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் ராஜா பேட்டி.
- விலைவாசி அதிகரிப்பை கண்டித்து, கோவையில் மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்!
- இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, விவசாயிகள் சங்கம் ஆர்ப்பட்டம்!
- காவலர் கொல்லப்பட்ட தினம், மாநகரப் பகுதியில் போலீசார் தீவிர சோதனை…!
Be First to Comment