உக்கடம் பெரிய குளத்தில் மீன்கள் செத்து மிதந்தன. கோவையில் உள்ள உக்கடம் பெரிய குளத்தில் மழைநீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது.
சாக்கடை நீர் பெரியகுளத்தில் கலப்பதால் ஆகாயத்தாமரை செடிகள் அதிக அளவில் வளர்ந்து குளத்தை ஆக்கிரமித்துள்ளது. சாக்கடை நீர் மற்றும் ரசாயன கழிவு நீரால் குளத்தில் உள்ள மீன்கள் அதிக அளவில் செத்து மிதக்கின்றன.செத்த மீன்கள் அப்புறப்படுத்த முடியாமல் ஆகாயத்தாமரைச் செடிகளின் ஊடே இருப்பதால் அழுகிய மீன்களின் துர்நாற்றம் அதிகமாக வீசுகின்றது. குளத்தை கடக்கும் வாகன ஓட்டிகள் துர்நாற்றம் தாங்காமல் மூக்கை மூடிச் செல்கின்றனர்.
மீன்கள்அழுகி மிதப்பதால் நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது. அதிகாரிகள் உடனடியாக குளத்தில் செத்து மிதக்கும் மீன்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
மீனவர்கள் கூறுகையில் : கோவையில் வெப்பம் அதிகரித்த நிலையில் குளத்து நீர் அதிக அளவு சூடு ஆகிறது .. மேலும் கழிவு தண்ணீர் கலப்பதும்… ஆக்சிஜன் பற்றக்குறையால் மீன் கள் செத்து மிதக்குது கோடை கால நிகழ்வு என்றனர்.

உக்கடம் பெரிய குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்
More from கோவை செய்திகள்More posts in கோவை செய்திகள் »
- இந்திய ரயில்வே துறை மற்றும் தபால் துறை இணைந்து துவங்கியுள்ள, புதிய பார்சல் சேவை குறித்த ஆலோசனைக் கூட்டம் கோவை அவிநாசி சாலையில் உள்ள சேம்பர் டவர்ஸ் அரங்கில் நடைபெற்றது.
- இலவச பேருந்துகளில் வேண்டுமென்றே அரசு பெயரை கெடுக்க, 100க்கு 99 சதவீதம் தவறாக சித்தரிக்கின்றனர் – கோவையில் சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் ராஜா பேட்டி.
- விலைவாசி அதிகரிப்பை கண்டித்து, கோவையில் மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்!
- இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, விவசாயிகள் சங்கம் ஆர்ப்பட்டம்!
- காவலர் கொல்லப்பட்ட தினம், மாநகரப் பகுதியில் போலீசார் தீவிர சோதனை…!
Be First to Comment