பொள்ளாச்சி நகராட்சி 26வது வார்டு தேர் மூட்டி ஆதவன் ஓட்டல் அருகே ரோட்டில் கழிவு நீர் மற்றும் குடி தண்ணீர் கலந்து வீணாக வழிதோடியதால் தூர்நாற்றம் வீசியது. இதனால் பொதுமக்களுக்கு பெரும் சிரமத்திற்குள்ளாயினர்.
இதனையடுத்து நகராட்சி ஆனையாளர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் மற்றும் அ.இ.அ.தி.மு.க சார்பாகவும் தெரிவிக்கப்பட்டது. தொடர் புகாரையடுத்து நகராட்சி மூலம் வேலைகளை துவங்கியது.
இந்நிலையில் இதுதொடர்பாக அ.தி.மு.கவைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் முரளி (எ) பழனிக்குமார், ”அந்த பணிகள் இன்னும் முழுமை பெறவில்லை. வேலையும் மந்தமாக நடைபெறுகிறது. குறிப்பிட்ட காலக்கெடுவிற்ககுள் வேலை முடியாமல் இருப்பதால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது வருகிறது. அந்த பகுதியில் செல்லும் பொது மக்கள் தூர்நாற்றத்தால் மூக்கை அடைத்துகொண்டு செல்கின்றனர். இதை உடனே சரி செய்யாவிட்டால் வருகின்ற 28ந் தேதி அ.இ.அ.தி.மு.க சார்பில் பொதுமக்களை திரட்டி உடைப்பு ஏற்பட்ட தண்ணீர் குழாயில் வாழை மரம் நடும் விழா போராட்டம் நடைபெறும்” என கூறியுள்ளார்.

உடைந்த குழாயில் வாழைமரம் நடும் போராட்டம் | tamilnews
More from கோவை செய்திகள்More posts in கோவை செய்திகள் »
- இந்திய ரயில்வே துறை மற்றும் தபால் துறை இணைந்து துவங்கியுள்ள, புதிய பார்சல் சேவை குறித்த ஆலோசனைக் கூட்டம் கோவை அவிநாசி சாலையில் உள்ள சேம்பர் டவர்ஸ் அரங்கில் நடைபெற்றது.
- இலவச பேருந்துகளில் வேண்டுமென்றே அரசு பெயரை கெடுக்க, 100க்கு 99 சதவீதம் தவறாக சித்தரிக்கின்றனர் – கோவையில் சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் ராஜா பேட்டி.
- விலைவாசி அதிகரிப்பை கண்டித்து, கோவையில் மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்!
- இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, விவசாயிகள் சங்கம் ஆர்ப்பட்டம்!
- காவலர் கொல்லப்பட்ட தினம், மாநகரப் பகுதியில் போலீசார் தீவிர சோதனை…!
Be First to Comment