கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையே ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தொடங்கிய மலை ரயில் சேவை தற்போது வரை இயங்கி வருகிறது.மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை நீராவி இன்ஜினால் இயக்கப்படும் இம்மலை ரயிலில் பயணம் செய்வது சுகமானது.
மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை மலை முகடுகளிடையே பல்சக்கரங்களில் இயக்கப்படும் இந்த மலை ரயில் பல்வேறு குகைகளைத்தாண்டி செல்வதால் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்து வருகிறது.
இதில் பயணம் செய்வதற்கு தமிழகம்,கேரளா,கர்நாடகா உள்ளிட்ட உள்நாடுகள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த சூழலில் கடந்த 2005 ஆம் ஆண்டு இந்த மலை ரயிலுக்கு யுனெஸ்கோ சார்பில் பாரம்பரிய அந்தஸ்து வழங்கப்பட்டது.
மேலும்,தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 8 மாதங்களுக்கு முன்னர் நிறுத்தப்பட்டது.இந்நிலையில் மேட்டுப்பாளையம் முதல் உதகை வரை செல்லும் மலை ரயிலானது வரும் செப்டம்பர் 6 ஆம் தேதி முதல் இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.ரயில்வேயின் இந்த அறிவிப்பு சுற்றுலாப்பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்,முன்பதிவு செய்யப்பட்டுள்ள பயணிகளுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

உதகை மலை ரயில் சேவை வரும் செப்டம்பர் 6 ஆம் தேதி முதல் துவக்கம்
More from கோவை செய்திகள்More posts in கோவை செய்திகள் »
- இந்திய ரயில்வே துறை மற்றும் தபால் துறை இணைந்து துவங்கியுள்ள, புதிய பார்சல் சேவை குறித்த ஆலோசனைக் கூட்டம் கோவை அவிநாசி சாலையில் உள்ள சேம்பர் டவர்ஸ் அரங்கில் நடைபெற்றது.
- இலவச பேருந்துகளில் வேண்டுமென்றே அரசு பெயரை கெடுக்க, 100க்கு 99 சதவீதம் தவறாக சித்தரிக்கின்றனர் – கோவையில் சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் ராஜா பேட்டி.
- விலைவாசி அதிகரிப்பை கண்டித்து, கோவையில் மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்!
- இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, விவசாயிகள் சங்கம் ஆர்ப்பட்டம்!
- காவலர் கொல்லப்பட்ட தினம், மாநகரப் பகுதியில் போலீசார் தீவிர சோதனை…!
Be First to Comment