பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு எதிராக மத்திய அரசை கண்டித்து கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பாக, அலுவலகம் முன்பாக நாம் தமிழர் கட்சியினர் கன்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல்,டீசல் விலையை கட்டுப்படுத்த வேண்டும், விலைவாசிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக மத்திய அரசு செயல் பட்டு வருகினற்து என பல்வேறு தரப்பினர் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, நாம் தமிழர் கட்சியினர் இன்று கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்பாட்டமானது, நாம்தமிழர் கட்சியின், மாநில ஒருங்கிணைப்பாளர் அப்துல் வகாப் தலைமையில் நடைபெற்றது, இந்த ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக, உடனடியாக பெட்ரோலிய பொருட்களின் விலையை குறைக்க வேண்டும், என்றும், கலால் வரியை ரத்து செய்ய வேண்டும் என்று கன்டன முழங்கங்களை கோஷங்களாக எழுப்பியவாறு தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய, அப்துல் வகாப் கூறுகையில் “பெட்ரோல் டீசல் விலை உயர்வை கட்டுபடுத்த மத்திய மாநில அரசுகள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று கன்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். மேலும் தமிழகத்தில் எதிர்கட்சியாக உள்ள அதிமுக அரசு பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து, தமிழகத்தில் ஏங்கேயும், ஒரு ஆர்ப்பாட்டமோ, அல்லது, எதிர்ப்பையோ இதுவரை பதிவு செய்ய வில்லை. மத்திய அரசின் இந்த செயலை கண்டு களத்தில் போராடி கொண்டிருப்பது நாம் தமிழர் கட்சி மட்டுமே.” என்றார்

எரிபொருள் விலை உயர்வை கண்டித்து நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்
More from கோவை செய்திகள்More posts in கோவை செய்திகள் »
- இந்திய ரயில்வே துறை மற்றும் தபால் துறை இணைந்து துவங்கியுள்ள, புதிய பார்சல் சேவை குறித்த ஆலோசனைக் கூட்டம் கோவை அவிநாசி சாலையில் உள்ள சேம்பர் டவர்ஸ் அரங்கில் நடைபெற்றது.
- இலவச பேருந்துகளில் வேண்டுமென்றே அரசு பெயரை கெடுக்க, 100க்கு 99 சதவீதம் தவறாக சித்தரிக்கின்றனர் – கோவையில் சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் ராஜா பேட்டி.
- விலைவாசி அதிகரிப்பை கண்டித்து, கோவையில் மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்!
- இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, விவசாயிகள் சங்கம் ஆர்ப்பட்டம்!
- காவலர் கொல்லப்பட்ட தினம், மாநகரப் பகுதியில் போலீசார் தீவிர சோதனை…!
Be First to Comment