திருப்பூர் அனுப்பர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவர் பனியன் கம்பெனிநடத்தி வருகிறார். தனது கம்பெனியில் வேலை பார்க்கும் வடமாநிலத்தைச் சேர்ந்த நான்கு நபர்களை அவர்களது ஊருக்கு வழியனுப்பிட தனது காரில் அழைத்துக்கொண்டு கோவை நோக்கி வந்து கொண்டிருந்தார்.
தேசிய நெடுஞ்சாலையில் கணியூர் சுங்கச்சாவடி அருகே வந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக கார் திடீர் தீ பிடித்து எரிந்தது. இதனை பார்த்து காரில் பயணம் செய்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக சுதாரித்து கொண்டவர்கள் காரிலிருந்து இறங்கினர். அதிர்ஷ்டவசமாக காரில் பயணம் செய்தவர்கள் தப்பித்தனர்.
சூலூரில் இருந்து வந்த தீயணைப்பு துறையினர் காரில் பற்றிய தீயை முழுமையாக அணைத்தனர். எனினும் இந்த விபத்தில் கார் முற்றிலும் எரிந்து சாம்பலானது. இதனால் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

ஓடி கொண்டிருந்த காரில் திடீர் தீ
More from கோவை செய்திகள்More posts in கோவை செய்திகள் »
- இந்திய ரயில்வே துறை மற்றும் தபால் துறை இணைந்து துவங்கியுள்ள, புதிய பார்சல் சேவை குறித்த ஆலோசனைக் கூட்டம் கோவை அவிநாசி சாலையில் உள்ள சேம்பர் டவர்ஸ் அரங்கில் நடைபெற்றது.
- இலவச பேருந்துகளில் வேண்டுமென்றே அரசு பெயரை கெடுக்க, 100க்கு 99 சதவீதம் தவறாக சித்தரிக்கின்றனர் – கோவையில் சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் ராஜா பேட்டி.
- விலைவாசி அதிகரிப்பை கண்டித்து, கோவையில் மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்!
- இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, விவசாயிகள் சங்கம் ஆர்ப்பட்டம்!
- காவலர் கொல்லப்பட்ட தினம், மாநகரப் பகுதியில் போலீசார் தீவிர சோதனை…!
Be First to Comment