சொன்னதை எல்லாம் செய்து வரும் ஸ்டாலினுக்கு ஆலோசனை வழங்குவதை விடுத்து பெட்ரோல் டீசல் விலையை குறைக்க மோடியை எதிர்த்து கமலஹாசன் போராட்டம் நடத்த வேண்டும் என தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
பெட்ரோல்,டீசல் விலைகளை உயர்த்துவதை தேர்தல் நேரத்தில் நிறுத்தி வைத்திருந்த மத்திய அரசு தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் விலை உயர்த்த தொடங்கிவிட்டது. தொடர்ந்து பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தி வரும் பாரதிய ஜனதா கட்சி அரசையும், மோடியையும் எதிர்த்து ஒரு வார்த்தை பேசாத, போராடாத மக்கள் நீதி மைய தலைவர் கமல்ஹாசன், திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தல் அறிக்கையில் சொன்னவற்றை எல்லாம் படிப்படியாக நிறைவேற்றி வரும் நிலையில் பெட்ரோல் டீசல் விலையைக் குறைக்க முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதுகிறார்.
கமலஹாசன் பெட்ரோல் டீசல் விலையை தொடர்ந்து உயர்த்தும் மோடியை எதிர்த்து தெருவுக்கு வந்து முதலில் போராட்டம் நடத்த வேண்டும். அறையில் அமர்ந்து கொண்டு ஆலோசனை மட்டும் வழங்கிக் கொண்டு இருக்ககலாமா? என கேள்வி எழுப்பியுள்ளார் தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன்.

கமலஹாசன் மோடியை எதிர்த்து போராட்டம் நடத்த தயாரா?கு.இராமகிருட்டிணன் கேள்வி
More from கோவை செய்திகள்More posts in கோவை செய்திகள் »
- இந்திய ரயில்வே துறை மற்றும் தபால் துறை இணைந்து துவங்கியுள்ள, புதிய பார்சல் சேவை குறித்த ஆலோசனைக் கூட்டம் கோவை அவிநாசி சாலையில் உள்ள சேம்பர் டவர்ஸ் அரங்கில் நடைபெற்றது.
- இலவச பேருந்துகளில் வேண்டுமென்றே அரசு பெயரை கெடுக்க, 100க்கு 99 சதவீதம் தவறாக சித்தரிக்கின்றனர் – கோவையில் சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் ராஜா பேட்டி.
- விலைவாசி அதிகரிப்பை கண்டித்து, கோவையில் மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்!
- இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, விவசாயிகள் சங்கம் ஆர்ப்பட்டம்!
- காவலர் கொல்லப்பட்ட தினம், மாநகரப் பகுதியில் போலீசார் தீவிர சோதனை…!
Be First to Comment