குறிச்சியில் பேரிடர் கால மீட்பு பயிற்சி நடைபெறுகிறது. குறிச்சி குளத்தில் காவலர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர்.
கோவையில் நடைபெற்றுவரும் காவலர்களுக்கான அவசரகால பேரிடர் மீட்பு பயிற்சியின் போது, படகு சவாரி, நீச்சல் பயிற்சி, காப்பாற்றுதல், பெருவெள்ள காலத்தில் மீட்பு பணி, கட்டிட இடிபாடுகளில் மீட்பு பணி, மரம் விழுந்தால் அகற்றுதல், விபத்து காலத்தில் உதவி மருத்துவமனைக்கு கொண்டு செல்லுதல் உள்ளிட்ட பயிற்சிகள் காவலர்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது.
இன்று தீயணைப்புத்துறையினர் குறிச்சி குளத்தில் சிறப்பு பயிற்சிகளை காவலர்களுக்கு வழங்கினர். ஆண்-பெண் காவலர்கள் என இருபாலரும் குறிச்சி குளத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வருவதை அந்த வழியாக சென்று மக்கள் நின்று பார்த்து செல்கின்றனர்.

குறிச்சியில் பேரிடர் கால மீட்பு பயிற்சி
More from கோவை செய்திகள்More posts in கோவை செய்திகள் »
- இந்திய ரயில்வே துறை மற்றும் தபால் துறை இணைந்து துவங்கியுள்ள, புதிய பார்சல் சேவை குறித்த ஆலோசனைக் கூட்டம் கோவை அவிநாசி சாலையில் உள்ள சேம்பர் டவர்ஸ் அரங்கில் நடைபெற்றது.
- இலவச பேருந்துகளில் வேண்டுமென்றே அரசு பெயரை கெடுக்க, 100க்கு 99 சதவீதம் தவறாக சித்தரிக்கின்றனர் – கோவையில் சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் ராஜா பேட்டி.
- விலைவாசி அதிகரிப்பை கண்டித்து, கோவையில் மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்!
- இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, விவசாயிகள் சங்கம் ஆர்ப்பட்டம்!
- காவலர் கொல்லப்பட்ட தினம், மாநகரப் பகுதியில் போலீசார் தீவிர சோதனை…!
Be First to Comment