குறிச்சி ஆரம்பபள்ளியில் கொரோனா தடுப்பூசி போட வந்தவர்கள் டோக்கன் பெறுவதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
கோவை மாவட்டத்தில் கொரோனாவின் மொத்த பாதிப்பு குறைந்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக பல்வேறு சிறப்பு முகாம்கள் மூலம் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் இன்று காலை 8 மணிக்கே ஏராளமானவர்கள் தடுப்பூசி போடுவதற்காக குறிச்சி ஆரம்ப பள்ளிக்கு வந்தனர். தடுப்பூசி போடுவதற்காக டோக்கன் வழங்கப்பட்டது. அப்போது டோக்கன் பெறுவதில் அவர்களுக்கு இடையே திடீரென தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை அங்கிருந்த ஊழியர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. டோக்கன் கொடுத்த ஊழியரை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இதனால் அங்கிருந்த ஊழியர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி போடப்படும் நிலையில் மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் வற்புறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் குறிச்சியில் தடுப்பூசி போடும் மையத்தின் அருகே பொதுமக்கள் சமூக இடைவெளி இன்றி கூட்டமாக திரண்டதால் பரபரப்பு நிலவியது.

குறிச்சி தடுப்பூசி முகாமில் தள்ளுமுள்ளு
More from கோவை செய்திகள்More posts in கோவை செய்திகள் »
- இந்திய ரயில்வே துறை மற்றும் தபால் துறை இணைந்து துவங்கியுள்ள, புதிய பார்சல் சேவை குறித்த ஆலோசனைக் கூட்டம் கோவை அவிநாசி சாலையில் உள்ள சேம்பர் டவர்ஸ் அரங்கில் நடைபெற்றது.
- இலவச பேருந்துகளில் வேண்டுமென்றே அரசு பெயரை கெடுக்க, 100க்கு 99 சதவீதம் தவறாக சித்தரிக்கின்றனர் – கோவையில் சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் ராஜா பேட்டி.
- விலைவாசி அதிகரிப்பை கண்டித்து, கோவையில் மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்!
- இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, விவசாயிகள் சங்கம் ஆர்ப்பட்டம்!
- காவலர் கொல்லப்பட்ட தினம், மாநகரப் பகுதியில் போலீசார் தீவிர சோதனை…!
Be First to Comment