பாரதியார் தொடர்பான உருவம் மற்றும் கவிதைகளை ஒரு மணி, இருபத்தைந்து நிமிடங்களில் 25 பேர் இணைந்து தனித்தனியாக 25 சதுர அடியில் கை எம்பிராய்டரியில் உருவாக்கி உலக சாதனை.
கனவு மெய்பட கிரியேட்டிவ்ஸ் எனும் அமைப்பு வாயிலாக கோவையை சேர்ந்த பிரபா செந்தில்குமார், கடந்த 10 ஆண்டுகளாக 1000க்கு மேற்பட்ட பெண்களுக்கு தையல், எம்பிராய்டரி, ஓவியம், நடனம், இசை முதலான திறன்களை கற்பித்து, கல்வியோடு கைத்தொழில்களை ஊக்குவிக்கும் விதமாக பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்கி தந்து வருகிறார்.
கை எம்பிராய்டரில் மகாகவி பாரதியார் எனும் தலைப்பில் ஐந்து வயது குழந்தை முதல் 60 வயது வரை உள்ள 25 பேர் கொண்ட குழுவினரை வைத்து பாரதியாரின் உருவத்துடன்,அவரது வாசகங்களை தனித்தனியாக 25 சதுர அடியில் வடிமைத்துள்ளனர்.
ஒரு மணி 25 நிமிடங்களில் உருவாக்கி உள்ள இந்த சாதனை நோபள் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.முன்னதாக நடைபெற்ற சாதனை நிகழ்ச்சி துவக்க விழாவில் சிறப்பு அழைப்பாளராக தையல் இயந்திர வர்த்தகத்தின் முதல் பெண் தொழில் முனைவோரான நர்மதா தேவி கலந்து கொண்டார்.
கை எம்பிராய்டரில் சாதனை செய்த 25 பேர் கொண்ட குழுவினருக்கு, நோபள் உலக சாதனை புத்தகத்தின் பதிப்பாளர் தியாகு நாகராஜ் சாதனை பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கவுரவித்தார். இதில் ஹந்துஸ்தான் ஸ்கௌட்ஸ் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் சந்தோஷ் கலந்து கொண்டார். சாதனை குறித்து கனவு மெய்பட கிரியேட்டிவ்ஸ் அமைப்பின் நிறுவனர் பிரபா செந்தில்குமார் கூறுகையில் , பெண்கள் கை தொழில் கற்று கொள்ள ஊக்கவிக்கவும், கல்வியுடனான சுய தொழிலின் முக்கியத்துவத்தை பெண்கள் அறியவும் இந்த சாதனை நிகழ்வு நடத்தப்படுவதாக தெரிவித்தார்.
Be First to Comment