கோவை மாநகராட்சியை கொரோனா இல்லாத மாநகராட்சியாக உருவாக்குவதே முதல் இலக்கு என புதிய ஆணையராக பதவி ஏற்ற ராஜகோபால் சுங்கரா தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் ஐ.ஏ.எஸ். ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதன் படி கோவை மாநகராட்சி கமிஷனராக பணியில் இருந்து வந்த குமாரவேல் பாண்டியன் மாற்றம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக கோவை மாநகராட்சி கமிஷனராக, சென்னை பெருநகர மாநகராட்சி தெற்கு மண்டல துணை கமிஷனராக பணியாற்றி வந்த ராஜகோபால் சுங்கரா நியமிக்கப்பட்டார். தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த இவர் கோவை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று ஆணையராக கோப்புகளில் கையெழுத்திட்டு இன்று பதவி ஏற்றார்.தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,தமிழகத்தில் இரண்டாவது பெரிய மாநகராட்சியான கோவை மாவட்டத்தில் தாம் பணியாற்றுவதில் மிக்க மகிழ்ச்சி எனவும்,முதற்கட்டமாக கொரோனா தடுப்பு பணிகளில் அதிக கவனம் செலுத்தி கொரோனா இல்லாத மாநகராட்சியாக கோவையை மாற்ற உள்ளதாக அவர் உறுதி தெரிவித்தார். புதிதாக பதவி ஏற்ற புதிய ஆணையருக்கு மாநகராட்சி அதிகாரிகள் பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

கொரோனா இல்லாத மாநகராட்சியாக உருவாக்குவதே முதல் இலக்கு கோவை புதிய ஆணையர்
More from கோவை செய்திகள்More posts in கோவை செய்திகள் »
- இந்திய ரயில்வே துறை மற்றும் தபால் துறை இணைந்து துவங்கியுள்ள, புதிய பார்சல் சேவை குறித்த ஆலோசனைக் கூட்டம் கோவை அவிநாசி சாலையில் உள்ள சேம்பர் டவர்ஸ் அரங்கில் நடைபெற்றது.
- இலவச பேருந்துகளில் வேண்டுமென்றே அரசு பெயரை கெடுக்க, 100க்கு 99 சதவீதம் தவறாக சித்தரிக்கின்றனர் – கோவையில் சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் ராஜா பேட்டி.
- விலைவாசி அதிகரிப்பை கண்டித்து, கோவையில் மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்!
- இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, விவசாயிகள் சங்கம் ஆர்ப்பட்டம்!
- காவலர் கொல்லப்பட்ட தினம், மாநகரப் பகுதியில் போலீசார் தீவிர சோதனை…!
Be First to Comment