சர்வதேச யோகா தினத்தையொட்டி கோவை கொடிசியா வளாகத்தில் ஆயுர்வேதம் மற்றும் மருத்துவ குழுவினருடன் covid-19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 200க்கும் மேற்பட்ட நபர்களுக்கு யோகாசன பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுடன் கலந்துரையாடினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில்,” இன்று சர்வதேச யோகாசன தினம் அதன் ஒரு பகுதியாக கோவை கொடிசியா வளாகத்தில் covid-19 வைரஸ் தொகுப்பு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு யோகாசன பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு அவர்களுக்கு யோகாசன பயிற்சி அளிப்பதை பார்வையிட்டுள்ளேன். தமிழக அரசு நேற்றைய தினம் மூன்று வகையாக மாவட்டங்களை பிரித்து தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவை நீட்டித்துள்ளது. கோவையில் எந்தவித தளர்வுமின்றி கடந்த வாரம் போன்றே ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஊரடங்கு ஒருவாரத்திற்கு கடைபிடிக்கப்படும் என்றார்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு யோகாசன பயிற்சி
More from கோவை செய்திகள்More posts in கோவை செய்திகள் »
- இந்திய ரயில்வே துறை மற்றும் தபால் துறை இணைந்து துவங்கியுள்ள, புதிய பார்சல் சேவை குறித்த ஆலோசனைக் கூட்டம் கோவை அவிநாசி சாலையில் உள்ள சேம்பர் டவர்ஸ் அரங்கில் நடைபெற்றது.
- இலவச பேருந்துகளில் வேண்டுமென்றே அரசு பெயரை கெடுக்க, 100க்கு 99 சதவீதம் தவறாக சித்தரிக்கின்றனர் – கோவையில் சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் ராஜா பேட்டி.
- விலைவாசி அதிகரிப்பை கண்டித்து, கோவையில் மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்!
- இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, விவசாயிகள் சங்கம் ஆர்ப்பட்டம்!
- காவலர் கொல்லப்பட்ட தினம், மாநகரப் பகுதியில் போலீசார் தீவிர சோதனை…!
Be First to Comment