Press "Enter" to skip to content

கோவையில் அதிமுகவினர் ஒட்டிய போஸ்டர்களை, நள்ளிரவில் கிழிக்கும் மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது!

கோவை விளாங்குறிச்சி ரோடு 24 ஆவது வட்டக் கழகச் செயலாளர் லட்சுமணன், அதிமுக ஆட்சியில் மக்களுக்கு வழங்கப்பட்ட தாலிக்கு தங்கம் உட்பட அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை அச்சிட்டு ஒட்டியிருந்தார்.கோவை அவினாசி சாலையில் மேம்பலத்தின் தூண்களில் ஒட்டப்பட்டு இருந்த போஸ்ட்டர்களை மர்ம நபர் ஒருவர் கிழிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.தகவல் அறிந்த அதிமுக தொண்டர்கள் அதே இடத்தில் மீண்டும் அப்பொழுது அதிமுக அரசின் திட்டங்களை விளக்கும் போஸ்ட்டர்களை ஒட்டியுள்ளனர்.

கோவை அவினாசி சாலையில் 10கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள திமுகவின் போஸ்டர்களை கிழிக்காமல் அதிமுக போஸ்டரை மட்டும் கிளித்துள்ளதாக அதிமுகவினர் குற்றம்சாட்டுகின்றனர். மேம்பால தூண்கள் மற்றும் பொது இடங்களில் போஸ்டர்கள் ஒட்டக்கூடாது என மாநகராட்சி ஆணையரின் உத்தரவுகளை மீறி திமுக, அதிமுக, பாஜகவினர் தொடர்ந்து போஸ்டர்களை ஒட்டி வருவதால் பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியையும் ,முக சுளிப்பையும் ஏற்படுத்தி வருகிறது.

More from கோவை செய்திகள்More posts in கோவை செய்திகள் »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications    OK No thanks