கோவை மாவட்டம் அன்னூரில் இருந்து கோவில்பாளையம் வழியாக காந்திபுரத்திற்கு 45″சி என்ற அரசுப்பேருந்து இயங்கி வருகிறது. இந்த பேருந்தில் பள்ளி மாணவ,மாணவிகள்,பெண்கள் உள்ளிட்டோர் அதிகளவில் பயணம் செய்வர். இந்நிலையில் நேற்றிரவு பெய்த கனமழையில் கோவை காந்திபுரத்தில் இருந்து அன்னூர் நோக்கி அரசுப்பேருந்து வந்து கொண்டு இருந்தது. அப்போது கனமழை பெய்து கொண்டு இருந்தது. இதனால் பேருந்திற்குள்ளும் மழைநீர் கொட்டத்துவங்கியுள்ளது. இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் முழுவதும் மழைநீரில் நனைந்தபடியே பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதனை அப்பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.தொடர் மழை பெய்து வருவதால் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Be First to Comment