கோவை கிணத்துக்கடவு காட்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கிரி கதிர்வேல். இவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இரவு வீடு திரும்புகையில் வீட்டு பீரோவில் வைத்திருந்த சுமார் 14 சவரன் தங்க நகைகள் மாயமானது தெரியவந்தது. ஆனால் வீடு பூட்டிய நிலையிலேயே இருந்த போது நகைகள் மாயமானதால், சந்தேகமடைந்த கதிர்வேல் நெகமம் போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்களது வீட்டில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு வீட்டு வேலைக்கு சேர்ந்த மதுரை மாவட்டத்தை சேர்ந்த ரேவதி என்பவரை போலீசார் அழைத்து விசாரித்தபோது, அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.
இதனால் சந்தேகமடைந்த போலீசார் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், கிரி கதிர்வேல் வெளியே சென்றதையடுத்து, அவரின் வீட்டின் அருகே வைத்திருந்த வீட்டு சாவியை எடுத்து உள்ளே புகுந்து 14-சவரன் நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து, அவரிடம் இருந்த 14 சவரன் நகைகளை மீட்டு, அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தற்போது ரேவதி நீதிமன்ற பிணையில் விடுவிக்கப்பட்டார்.

கோவையில் நகைகளை திருடிய பணிப்பெண் கைது!
More from கோவை செய்திகள்More posts in கோவை செய்திகள் »
- இந்திய ரயில்வே துறை மற்றும் தபால் துறை இணைந்து துவங்கியுள்ள, புதிய பார்சல் சேவை குறித்த ஆலோசனைக் கூட்டம் கோவை அவிநாசி சாலையில் உள்ள சேம்பர் டவர்ஸ் அரங்கில் நடைபெற்றது.
- இலவச பேருந்துகளில் வேண்டுமென்றே அரசு பெயரை கெடுக்க, 100க்கு 99 சதவீதம் தவறாக சித்தரிக்கின்றனர் – கோவையில் சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் ராஜா பேட்டி.
- விலைவாசி அதிகரிப்பை கண்டித்து, கோவையில் மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்!
- இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, விவசாயிகள் சங்கம் ஆர்ப்பட்டம்!
- காவலர் கொல்லப்பட்ட தினம், மாநகரப் பகுதியில் போலீசார் தீவிர சோதனை…!
Be First to Comment