பிரதமர் மோடியின் 71வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பிரதமரின் பிறந்தநாளை சேவா திவஸ் என்ற பெயரில் பா.ஜ.,வினர் கொண்டாடி வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக கோவை கே.என்.ஜி புதூர் பிரிவு தடாகம் ரோடு பகுதியில், பாரதிய ஜனதா அமைப்பு சாரா நல வாரிய மாவட்ட அமைப்பாளர் கோபி கிருஷ்ணன் மற்றும் கோவை மாநகர மாவட்ட பட்டியல் அணி செயலாளர் மோகன் மற்றும் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவில் பாஜக கொடியினை ஏற்றி வைத்து தூய்மை பணியாளர்களுக்கு பாத பூஜை செய்தனர்.
மேலும் பா.ஜ.க-வினர் கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கோவை மாவட்ட அமைப்பு சாரா தலைவர் புவனேஷ் மற்றும் கோவை மாநகர மாவட்ட பட்டியல் அணி தலைவர் விவேகானந்தர் கலந்து கொண்டு தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர். இதில் பாஜக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கோவையில் பிரதமர் மோடியின் பிறந்தநாள் பா.ஜ.க சார்பாக தூய்மை பணியாளர்களுக்கு பாத பூஜை
More from கோவை செய்திகள்More posts in கோவை செய்திகள் »
- இந்திய ரயில்வே துறை மற்றும் தபால் துறை இணைந்து துவங்கியுள்ள, புதிய பார்சல் சேவை குறித்த ஆலோசனைக் கூட்டம் கோவை அவிநாசி சாலையில் உள்ள சேம்பர் டவர்ஸ் அரங்கில் நடைபெற்றது.
- இலவச பேருந்துகளில் வேண்டுமென்றே அரசு பெயரை கெடுக்க, 100க்கு 99 சதவீதம் தவறாக சித்தரிக்கின்றனர் – கோவையில் சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் ராஜா பேட்டி.
- விலைவாசி அதிகரிப்பை கண்டித்து, கோவையில் மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்!
- இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, விவசாயிகள் சங்கம் ஆர்ப்பட்டம்!
- காவலர் கொல்லப்பட்ட தினம், மாநகரப் பகுதியில் போலீசார் தீவிர சோதனை…!
Be First to Comment