கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் மனிதநேய பவுண்டேஷன் டிரஸ்ட் சார்பாக பல்வேறு நலத்திட்ட உதவிகள்,தன்னார்வலர்களுக்கு விருது வழங்கி ஊக்குவிப்பது என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது இந்நிலையில் பல்வேறு துறைகளில் சாதித்த மகளிரை கௌரவிக்கும் வகையில் வீரமங்கை வேலுநாச்சியார் நினைவு விருது வழங்கும் விழா கோவை போத்தனூர் சாலை பிசி ஃபுட் அரங்கில் நடைபெற்றது. டிரஸ்டின் தலைவர் கோவை சுலைமான் தலைமையில் நடைபெற்ற இதில் ஆலோசகர் பால்ராசு அனைவரையும் வரவேற்றுப் பேசினார் சிறப்பு விருந்தினர்களாக லீமா ரோஸ் மார்டின், டாக்டர் ரூபா சௌந்தரி, டாக்டர் ராதிகா, வள்ளியம்மாள் மற்றும் ஸ்ரீதேவி டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் சிவ கணேஷ் சென்னை மொபைல்ஸ் உரிமையாளர் சம்சு அலி டாக்டர் செந்தில்குமார் ஆகியோர் கலந்துகொண்டு கல்வி,சமூக சேவை,மருத்துவம்,ஊடகம் என பல்வேறு துறைகளில் சாதித்த மகளிருக்கு விருதுகள் வழங்கி கௌரவித்தனர் நிகழ்ச்சியில் ரம்லா, சரஸ்வதி, சர்மிளா, பானு, மஞ்சு, தேவி, சிவகாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கோவையில் மனிதநேய பவுண்டேஷன் டிரஸ்ட் சார்பாக விருது வழங்கும் விழா
More from கோவை செய்திகள்More posts in கோவை செய்திகள் »
- இந்திய ரயில்வே துறை மற்றும் தபால் துறை இணைந்து துவங்கியுள்ள, புதிய பார்சல் சேவை குறித்த ஆலோசனைக் கூட்டம் கோவை அவிநாசி சாலையில் உள்ள சேம்பர் டவர்ஸ் அரங்கில் நடைபெற்றது.
- இலவச பேருந்துகளில் வேண்டுமென்றே அரசு பெயரை கெடுக்க, 100க்கு 99 சதவீதம் தவறாக சித்தரிக்கின்றனர் – கோவையில் சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் ராஜா பேட்டி.
- விலைவாசி அதிகரிப்பை கண்டித்து, கோவையில் மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்!
- இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, விவசாயிகள் சங்கம் ஆர்ப்பட்டம்!
- காவலர் கொல்லப்பட்ட தினம், மாநகரப் பகுதியில் போலீசார் தீவிர சோதனை…!
Be First to Comment