கோவை கொடீசியா அலுவலகத்தில், கொடீசியாவின் தலைவர் ரமேஷ் பாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கோவை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் ஜீன் 2 முதல் 6 வரை 19 வது சர்வதேச இயந்திர மற்றும் பொறியியல் தொழில் கண்காட்சி நடைபெற இருப்பதாகவும், இக்கண்காட்சியில் இந்தியா, தைவான், சீனா, ஜெர்மனி, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் பங்கேற்க இருப்பதாகவும் தெரிவித்தார்.
இக்கண்காட்சியில் 406 நிறுவனங்கள் பங்கேற்க இருப்பதாகவும், உள்நாட்டு மற்றும் சர்வதேச அளவில் 50000 பேர் வர்த்தக பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த கண்காட்சியின் மூலம் 800 கோடி அளவில் வணிகம் நடக்கும் என எதிர்பார்ப்பதாகவும், இந்தியா முழுவதும் உள்ள தொழில் அமைப்புகளின் பிரதிநிதிகள் வருகை தர இருப்பதாகவும் தெரிவித்த ரமேஷ் பாபு,
இந்திய அரசின் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான அமைச்சகத்தின் சார்பில் மானியத்துடன் சிறு,குறு மற்றும் தொழில்நிறுவனங்கள் பங்கேற்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் எளிதில் நிதி உதவி பெறும் வகையில் NSIC மற்றும் SIDBI நிறுவனங்கள் பங்கேற்க இருப்பதகாவும் அவர் தெரிவித்தார்.

கோவை கொடிசியாவில் சர்வதேச இயந்திர மற்றும் பொறியியல் தொழில் கண்காட்சி ..
More from கோவை செய்திகள்More posts in கோவை செய்திகள் »
- இந்திய ரயில்வே துறை மற்றும் தபால் துறை இணைந்து துவங்கியுள்ள, புதிய பார்சல் சேவை குறித்த ஆலோசனைக் கூட்டம் கோவை அவிநாசி சாலையில் உள்ள சேம்பர் டவர்ஸ் அரங்கில் நடைபெற்றது.
- இலவச பேருந்துகளில் வேண்டுமென்றே அரசு பெயரை கெடுக்க, 100க்கு 99 சதவீதம் தவறாக சித்தரிக்கின்றனர் – கோவையில் சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் ராஜா பேட்டி.
- விலைவாசி அதிகரிப்பை கண்டித்து, கோவையில் மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்!
- இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, விவசாயிகள் சங்கம் ஆர்ப்பட்டம்!
- காவலர் கொல்லப்பட்ட தினம், மாநகரப் பகுதியில் போலீசார் தீவிர சோதனை…!
Be First to Comment