தி.மு.க அரசு பொறுப்பேற்றவுடன் தலைமைச் செயலாளர் முதல் அனைத்து துறை உயர் அதிகாரிகளும் பணி மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர் . போலீஸ் கமிஷனர் உட்பட உயர் போலீஸ் அதிகாரிகளும் மாற்றப்பட்டு வந்தனர். கோவை மாநகர் மற்றும் புறநகர் போலீஸ் ஸ்டேஷன்களில் பணிபுரிந்த பெரும்பாலான இன்ஸ்பெக்டர்கள் மேற்கு மண்டலத்தில் இருந்து தெற்கு மற்றும் மத்திய மண்டல போலீசுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதன்படி கோவை மாவட்டத்தில் உள்ள துடியலூர் இன்ஸ்பெக்டர் பால முரளி சுந்தரம் ,கருமத்தம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம், தொண்டாமுத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், பேரூர் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சூலூர் இன்ஸ்பெக்டர் முருகேசன், ஆலந்துறை இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், பொள்ளாச்சி இன்ஸ்பெக்டர் விஜயன், நெகமம் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் ராஜன், குனியமுத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியார், புலனாய்வுப் பிரிவு இன்ஸ்பெக்டர் மணிவர்மன், ஆர்எஸ் புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கனகசபாபதி, போத்தனூர் இன்ஸ்பெக்டர் முரளிதரன், சிங்காநல்லூர் இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டியன், உளவுப் பிரிவு இன்ஸ்பெக்டர் ராபி சுஜின் ஜோஸ், கோவை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ஆகியோர் தென் மாவட்டங்களுக்கு பணிமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

கோவை போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மாற்றம்
More from கோவை செய்திகள்More posts in கோவை செய்திகள் »
- இந்திய ரயில்வே துறை மற்றும் தபால் துறை இணைந்து துவங்கியுள்ள, புதிய பார்சல் சேவை குறித்த ஆலோசனைக் கூட்டம் கோவை அவிநாசி சாலையில் உள்ள சேம்பர் டவர்ஸ் அரங்கில் நடைபெற்றது.
- இலவச பேருந்துகளில் வேண்டுமென்றே அரசு பெயரை கெடுக்க, 100க்கு 99 சதவீதம் தவறாக சித்தரிக்கின்றனர் – கோவையில் சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் ராஜா பேட்டி.
- விலைவாசி அதிகரிப்பை கண்டித்து, கோவையில் மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்!
- இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, விவசாயிகள் சங்கம் ஆர்ப்பட்டம்!
- காவலர் கொல்லப்பட்ட தினம், மாநகரப் பகுதியில் போலீசார் தீவிர சோதனை…!
Be First to Comment