கோவை மதுக்கரை அடுத்த குரும்பபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் விஜகுமார். இவரது இரண்டாவது மகன்தான் 13 வயதான பிருதிவிராஜ். தற்போது ஒன்பதாம் படித்து வரும் இச்சிறுவன் நன்றாக ஓடியாடி விளையாடி வந்த நிலையில் தற்போது இதய செயலிழப்பு காரணமாக கோவையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிகிச்சைக்கு தேவையான பணம் இல்லாததால் மருத்துவமனையில் வைத்து கவனிக்க முடியாமல் சிறூவனை வீட்டில் வைத்து பெற்றோர் கவனித்து வருகின்றனர். மாதத்தில் பெரும்பாலான நாட்கள் மருத்துவமனையில் இருக்கும் சூழல் இருப்பதாகவும்,அறுவை சிகிச்சை செய்வதற்கு முன்னரே இதுவரை ரூபாய் 10 லட்சத்திற்கும் மேல் செலவாகிவிட்ட நிலையில், இருதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய 25 லட்சம் செலவாகும் என மருத்துவர்கள் தெரிவித்து இருப்பதால் பணத்தை திரட்ட முடியாமல் அவர்கள் தவித்து வந்தனர்.
இந்நிலையில் பல நல்ல உள்ளங்கள் சிறுவனுக்கு நிதி உதவி அளித்து வந்தனர். நமது குறிச்சி பகுதியை சேர்ந்த தி.மு.க 98வது-அ வட்ட பொறுப்பாளர் கண்ணன் அந்த சிறுவனின் மருத்துவ உதவிக்கு ரூ.1.25 லட்சம் அளித்துள்ளார். இதுபோன்ற இன்னும் பலர் உதவ முன்வர வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

சிறுவனின் இதயமாற்று சிகிச்சைக்கு தி.மு.க பொறுப்பாளர் ரூ.1.25 லட்சம் உதவி
More from கோவை செய்திகள்More posts in கோவை செய்திகள் »
- இந்திய ரயில்வே துறை மற்றும் தபால் துறை இணைந்து துவங்கியுள்ள, புதிய பார்சல் சேவை குறித்த ஆலோசனைக் கூட்டம் கோவை அவிநாசி சாலையில் உள்ள சேம்பர் டவர்ஸ் அரங்கில் நடைபெற்றது.
- இலவச பேருந்துகளில் வேண்டுமென்றே அரசு பெயரை கெடுக்க, 100க்கு 99 சதவீதம் தவறாக சித்தரிக்கின்றனர் – கோவையில் சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் ராஜா பேட்டி.
- விலைவாசி அதிகரிப்பை கண்டித்து, கோவையில் மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்!
- இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, விவசாயிகள் சங்கம் ஆர்ப்பட்டம்!
- காவலர் கொல்லப்பட்ட தினம், மாநகரப் பகுதியில் போலீசார் தீவிர சோதனை…!
Be First to Comment