கோவை போத்தனூரில் தந்தை, மகன் மற்றும் நண்பர் கூட்டுச் சேர்ந்து சீட்டு நிறுவனம் நடத்தி ஏமாற்றிவிட்டு தலைமறைவாகியுள்ளனர். அவர்களிடம் பணம் கட்டியவர்கள் கொடுத்து புகாரைத் தொடர்ந்து போத்தனூர் போலீஸார் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.
கோவை போத்தனூரில் ரொனால்டு ரீகன் டேவிட் என்பவரும் அவரது தந்தை டேவிட் சாமுவேல் ஆகியோருடன் அவர்களது நண்பர் ராஜேந்திரன் ஆகியோர் சீட்டு நிறுவனம் நடத்தி வந்தனர். மாதாந்திர சீட்டு நடத்தி பலரிடம் பணம் வசூல் செய்தனர். குறிச்சி ஹவுசிங் யூனிட் பகுதியைச் சேர்ந்த அன்சாரி, இவர்களது சீட்டு நிறுவனத்தில் சேர்ந்து ரூபாய் 5 லட்சம் செலுத்தி உள்ளார். ஆனால், முதிர்வுத் தொகையை தராமல் சீட்டு நிறுவனத்தினர் காலம் தாழ்த்தி வந்துள்ளனர்.
இந்தநிலையில், மூவரும் தலைமறைவாகினர். இதுகுறித்து போத்தனூர் போலீஸாரிடம் அன்சாரி புகார் செய்தார். விசாரணையில் 68 பேரிடம் ரூபாய் 70 லட்சத்து 61 ஆயிரம் மோசடி செய்திருப்பது தெரிய வந்ததைத் தொடர்ந்து, இந்த வழக்கை கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாருக்கு மாற்றப்பட்டது. மூன்று பேர் மீதும் கூட்டு சதி, ஏமாற்றுதல், தொழிலாளர் பாதுகாப்பு நலச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். தலைமறைவாக இருக்கும் சம்பந்தப்பட்ட மூன்று பேரையும் போலீஸார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சீட்டு நிறுவனம் நடத்தியவர்கள் தலைமறைவு. போத்தனூர் போலீஸார் தேடல்
More from கோவை செய்திகள்More posts in கோவை செய்திகள் »
- இந்திய ரயில்வே துறை மற்றும் தபால் துறை இணைந்து துவங்கியுள்ள, புதிய பார்சல் சேவை குறித்த ஆலோசனைக் கூட்டம் கோவை அவிநாசி சாலையில் உள்ள சேம்பர் டவர்ஸ் அரங்கில் நடைபெற்றது.
- இலவச பேருந்துகளில் வேண்டுமென்றே அரசு பெயரை கெடுக்க, 100க்கு 99 சதவீதம் தவறாக சித்தரிக்கின்றனர் – கோவையில் சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் ராஜா பேட்டி.
- விலைவாசி அதிகரிப்பை கண்டித்து, கோவையில் மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்!
- இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, விவசாயிகள் சங்கம் ஆர்ப்பட்டம்!
- காவலர் கொல்லப்பட்ட தினம், மாநகரப் பகுதியில் போலீசார் தீவிர சோதனை…!
Be First to Comment