சுந்தராபுரம் அடுத்த காந்தி நகர் பஸ் ஸ்டாப் அருகே, ”இண்டல் மணி” எனும் நகை கடன் வழங்கும் தனியார் நிதி நிறுவன கிளை செயல்படுகிறது. இந்த தனியார் நிதி நிறுவனத்தில் நடந்த கொள்ளை முயற்சியில், இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் தப்பின.
நேற்று காலை வேலைக்கு வந்த ஊழியர்கள், நிறுவனத்தின் ஷட்டர் சில அடி திறந்திருப்பதை பார்த்தனர். இதனையடுத்து நிதி நிறுவனத்தில் போத்தனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசாரும், கைரேகை பதிவு பிரிவினரும் அங்கு வந்து, ஷட்டரை திறந்து உள்ளே சென்றுள்ளனர். நகைகள் வைக்கப்பட்டிருந்த லாக்கர்கள் உடைக்கப்படாமல் இருப்பது தெரிந்தது.’சிசிடிவி’ கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, இருவர் நேற்று முன்தினம் நள்ளிரவு, ஷட்டரை திறந்து உள்ளே வருவதும், ஒரு நிமிடத்திற்கு பின் வெளியே சென்றதும் தெரிந்தது.
இதுகுறித்து மேலாளரிடம் விசாரிக்கையில், லாக்கரில், இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள, ஆறு கிலோ தங்க நகைகள் மற்றும் 1.5 லட்சம் ரூபாய் இருப்பதும் தெரிய வந்தது.தொடர்ந்து, போலீசார் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்களை தேடுகின்றனர். தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள இடத்தில் நடந்த சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுந்தராபுரம் நிதி நிறுவனத்தில் கொள்ளை முயற்சி
More from கோவை செய்திகள்More posts in கோவை செய்திகள் »
- இந்திய ரயில்வே துறை மற்றும் தபால் துறை இணைந்து துவங்கியுள்ள, புதிய பார்சல் சேவை குறித்த ஆலோசனைக் கூட்டம் கோவை அவிநாசி சாலையில் உள்ள சேம்பர் டவர்ஸ் அரங்கில் நடைபெற்றது.
- இலவச பேருந்துகளில் வேண்டுமென்றே அரசு பெயரை கெடுக்க, 100க்கு 99 சதவீதம் தவறாக சித்தரிக்கின்றனர் – கோவையில் சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் ராஜா பேட்டி.
- விலைவாசி அதிகரிப்பை கண்டித்து, கோவையில் மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்!
- இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, விவசாயிகள் சங்கம் ஆர்ப்பட்டம்!
- காவலர் கொல்லப்பட்ட தினம், மாநகரப் பகுதியில் போலீசார் தீவிர சோதனை…!
Be First to Comment