சூலூர் விமானப்படை தளத்தில் குடியரசுத் தலைவர் வருவதையொட்டி பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஐந்து நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார்.சென்னையில் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு நாளை சென்னையிலிருந்து விமானம் மூலம் சூலூர் படைத்தளம் வந்தடைந்து பின்னர் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் நீலகிரி செல்ல உள்ளார்.
இதனையடுத்து சூலூர் பகுதியில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.மேலும் விமானப்படை தளத்தை சுற்றியும் மோப்ப நாய்கள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் மூலம் சோதனை நடைபெற்று வருகிறது.
ராணுவ ஹெலிகாப்டர்கள் ராணுவ விமானங்கள் மூலம் தொடர் கண்காணிப்பு செய்யப்பட்டு வருகிறது குடியரசுத் தலைவர் வரும் பொழுது வானிலையில் மாற்றம் எதுவும் ஏற்பட்டால் தரைவழியாக நீலகிரி செல்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. அதன்படி குடியரசு தலைவர் செல்லக்கூடிய வாகன வழி பாதைகளில் சோதனையானது நடைபெற்றது. ராணுவ வாகனங்கள் மற்றும் காவல்துறை வாகனங்கள் அணிவகுத்து பாதுகாப்பு சோதனை நடைபெற்றது .இதில் 41 ராணுவ வாகனங்கள் பங்கேற்றன.இதற்கு முன்பாக கோவை மாவட்ட ஆட்சியர் மாவட்ட எஸ்பி உள்ளிட்டோர், ராணுவ அதிகாரிகளிடம் பாதுகாப்பு பணிகள் குறித்து கேட்டறிந்து, ஆய்வு பணியை மேற்கொண்டனர்.

சூலூர் விமானப்படை தளத்தில் குடியரசுத்தலைவர் வருவதையொட்டி பாதுகாப்பு ஒத்திகை
More from கோவை செய்திகள்More posts in கோவை செய்திகள் »
- இந்திய ரயில்வே துறை மற்றும் தபால் துறை இணைந்து துவங்கியுள்ள, புதிய பார்சல் சேவை குறித்த ஆலோசனைக் கூட்டம் கோவை அவிநாசி சாலையில் உள்ள சேம்பர் டவர்ஸ் அரங்கில் நடைபெற்றது.
- இலவச பேருந்துகளில் வேண்டுமென்றே அரசு பெயரை கெடுக்க, 100க்கு 99 சதவீதம் தவறாக சித்தரிக்கின்றனர் – கோவையில் சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் ராஜா பேட்டி.
- விலைவாசி அதிகரிப்பை கண்டித்து, கோவையில் மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்!
- இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, விவசாயிகள் சங்கம் ஆர்ப்பட்டம்!
- காவலர் கொல்லப்பட்ட தினம், மாநகரப் பகுதியில் போலீசார் தீவிர சோதனை…!
Be First to Comment