கிணத்துக்கடவு டவுன் பேருந்து நிலையம் அருகில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளதை கண்டிக்கும் வகையில் மதுபானங்களை தரையில் கொட்டி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு.
கோவை கிணத்துக்கடவு பேருந்து நிலையம் அருகில், புதிதாக திறக்கப்பட்டு உள்ள டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி அப்பகுதியை சேர்ந்த ராமநாதன் என்பவர் குரும்பபாளையம் பிரிவு ஸ்ரீராம் நகர் பொதுமக்கள் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

மனு அளிக்க வந்த அவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மதுபானங்களை தரையில் கொட்டி மதுக்கடைக்கு எதிர்ப்பை தெரிவித்தார். பேருந்து நிலையம் அருகில் டாஸ்மாக் கடை திறக்கப்படுவதால் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படும் எனவும் டாஸ்மாக் கடை அருகில் குடிதண்ணீர் குழாய், கோவில் அமைந்துள்ளதால் பொது மக்களுக்கு மிகவும் சிரமம் ஏற்படும் எனவும் சட்ட ஒழுங்கு பிரச்சனை வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது எனவே அந்த டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
Be First to Comment