Press "Enter" to skip to content

தமிழக பாரம்பரிய கலையில் உலக சாதனை!

கோவையை சேர்ந்த சகோதரிகள் இருவர் ஒரே நேரத்தில் தமிழக பாரம்பரிய கலையில், உலக சாதனை செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர்.

கோவை சேரன்மாநகர் பகுதியை சேர்ந்த சதீஷ் குமார்,வித்யா ஆகியோரின் மகள்கள் ரித்திகா,மற்றும் ரியா. சிறு வயது முதலே தமிழக பாரம்பரிய கலைகளை கற்பதில் ஆர்வமுள்ள சகோதரிகள். இருவரும், தற்போது இதில் உலக சாதனை செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர். பதினோரு வயதான ரித்திகா, ஒற்றை மற்றும் இரட்டை சிலம்பம், சுருள் வாள்,மான்கொம்பு,மற்றும் வாள் வீச்சு என ஐந்து கலைகளை காலை ஐந்து மணி முதல் மாலை ஆறு மணி வரை தொடர்ந்து,13 மணி நேரம் சுற்றி இந்தியா உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

இதே போல இவரது இளைய சகோதரி ரியா ஒற்றை மற்றும் இரட்டை சிலம்பங்களை இரண்டு வழி முறைகளில் தொடர்ந்து ஏழு மணி நேரம் சுற்றி, இவரும் இந்தியா உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.கோவை முல்லை தற்காப்பு கலை கழகத்தில் பயிற்சி பெற்று வரும்,சகோதரிகள் இருவரும் ஒரே நேரத்தில் இரு வேறு சாதனைகளை செய்தது தமிழக பாரம்பரிய கலை ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது..

More from கோவை செய்திகள்More posts in கோவை செய்திகள் »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications    OK No thanks