கோவையில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் காவல்துறை நடவடிக்கை எடுக்காவிட்டால் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும்- இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் பேட்டி…
கோவை காட்டூர் பகுதியில் இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர்
கோவையில் மிகப்பெரிய கலவரத்துக்கு திட்டமிட்டுள்ளதாகவும் பல கோடி ரூபாய் பணம் அவர்களுக்கு போயுள்ளதால்தால் என் ஐ ஏ சோதனை நடந்துள்ளது.
பயங்கரவாத செயல்கள் அவர்கள் செய்தது நிரூபிக்கப்பட்டதன் காரணமாக தான் என் ஐ ஏ சோதனை செய்துள்ளது.அதற்கான ஆதாரங்களையும் எடுத்துள்ளனர் என்றார்.
மேலும் தமிழகத்தில் திமுக மூன்று குழுவாக பிரிந்துள்ளது என தெரிவித்த அவர் முதல்வர் கேள்வி கேட்டால் ஆ.ராசாவால் கட்சி பிளவுபடும் என்பதால் மவுனமாக உள்ளார் என குற்றம்சாட்டினார்.

மேலும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் காவல்துறை நடவடிக்கை எடுக்காவிட்டால் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் எனவும் தெரிவித்தார்.
Be First to Comment