கொரோனாவால் பாதிக்கப்பட்ட சுற்றுலா வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய மக்கள் உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சிலின் போக்குவரத்து அணியினர் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து அணியின் தேசிய தலைவர் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கொரோனா காலத்தில் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் வாகன உரிமையாளர்களில் சுற்றுலா வாகனங்களுக்கு 1 வருட கால சாலை வரியை ரத்து செய்ய வேண்டும். சுற்றுலா வாகனங்களுக்கு உண்டான வாகன கட்டணங்களை அரசே நிர்ணயம் செய்ய வேண்டும். கொரோனா காலத்தில் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் ஓட்டுனர்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும். தனியார் நிறுவனங்கள் கோவிட் காலத்தில் வாகன கடனுக்கான வட்டியை ரத்து செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும், பெட்ரோல் டீசல் விலை உயர்வு, வாகன கடனை வசூல் செய்ய தனியார் நிறுவனங்கள் அடியாட்களை கொண்டு மிரட்டுவதை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர். இதில் பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக சுற்றுலா ஓட்டுனர்கள் உதவி குழு சார்பாக மறைந்த அப்துல் கலாமின் நினைவு தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

தேசிய மக்கள் உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் போக்குவரத்து அணியினர் ஆர்ப்பாட்டம்
More from கோவை செய்திகள்More posts in கோவை செய்திகள் »
- இந்திய ரயில்வே துறை மற்றும் தபால் துறை இணைந்து துவங்கியுள்ள, புதிய பார்சல் சேவை குறித்த ஆலோசனைக் கூட்டம் கோவை அவிநாசி சாலையில் உள்ள சேம்பர் டவர்ஸ் அரங்கில் நடைபெற்றது.
- இலவச பேருந்துகளில் வேண்டுமென்றே அரசு பெயரை கெடுக்க, 100க்கு 99 சதவீதம் தவறாக சித்தரிக்கின்றனர் – கோவையில் சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் ராஜா பேட்டி.
- விலைவாசி அதிகரிப்பை கண்டித்து, கோவையில் மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்!
- இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, விவசாயிகள் சங்கம் ஆர்ப்பட்டம்!
- காவலர் கொல்லப்பட்ட தினம், மாநகரப் பகுதியில் போலீசார் தீவிர சோதனை…!
Be First to Comment