நாட்டின் 75 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கடந்த ஆகஸ்ட் 1 ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் கிராமிய கலை, சிலம்பம், கராத்தே, நடனம் என பல்வேறு துறைகளில் சாதனைகள் செய்து பீனிக்ஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர்.
சாதனை புரிந்த 85 குழுக்களை தேர்வு செய்து தேசத்தின் பெருமை விருது வழங்கும் விழா கோவை போத்தனூர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. ஐ.நா.வின் இளைஞர் அமைப்பின் தூதுவர் டாக்டர் கலையரசன் தலைமையில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராம் கலந்து கொண்டு சாதனையாளர்களுக்கு விருது வழங்கி கவுரிவித்தார்.
இதில் கிராமிய கலை,ஆசிரியர்கள்,ஓவியர்கள்,மண்பாண்ட தொழிலாளர்கள் என பல்வேறு துறை சார்ந்த சாதனையாளர்களுக்கு விருது வழங்கப்பட்டது.தொடர்ந்து விழாவில் கரகாட்டம்,சிலம்பம்,ஒயிலாட்டம், பறையிசை என தமிழர் கலாச்சார நிகழ்வுகள் நடைபெற்றன.விழாவில் தமிழகம்,கேரளா என பல்வேறு பகுதிகளை சேர்ந்த கலாச்சார ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

நாட்டுப்புற கலைகள் உட்பட பல்வேறு துறையினர் சாதனையாளர்கள் விருது
More from கோவை செய்திகள்More posts in கோவை செய்திகள் »
- இந்திய ரயில்வே துறை மற்றும் தபால் துறை இணைந்து துவங்கியுள்ள, புதிய பார்சல் சேவை குறித்த ஆலோசனைக் கூட்டம் கோவை அவிநாசி சாலையில் உள்ள சேம்பர் டவர்ஸ் அரங்கில் நடைபெற்றது.
- இலவச பேருந்துகளில் வேண்டுமென்றே அரசு பெயரை கெடுக்க, 100க்கு 99 சதவீதம் தவறாக சித்தரிக்கின்றனர் – கோவையில் சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் ராஜா பேட்டி.
- விலைவாசி அதிகரிப்பை கண்டித்து, கோவையில் மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்!
- இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, விவசாயிகள் சங்கம் ஆர்ப்பட்டம்!
- காவலர் கொல்லப்பட்ட தினம், மாநகரப் பகுதியில் போலீசார் தீவிர சோதனை…!
Be First to Comment