கோயம்புத்தூர் அருகே பெரியநாயக்கன்பாளையம் விஜயலட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் மதன் இவரது மகன் விக்னேஷ் வயது 18 இவர் கோயம்புத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் டூ முடித்துவிட்டு கடந்த 12ஆம் தேதி நீட் தேர்வு எழுதி உள்ளார்.
அதில் சரியாக எழுதாததால் நீட் தேர்வில் தோல்வி அடைந்த பயத்தில் வீட்டை விட்டு வெளியேறி உள்ளார்
இது சம்பந்தமாக அவரது பெற்றோர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை இதனால் கோயம்புத்தூர் பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீசார் காணாமல் போனதாக போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். நேற்று நள்ளிரவு அந்த மாணவன் கோயம்புத்தூர் இரயில் நிலையத்தில் சென்னை செல்லும் ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறியதாக ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்
இதுகுறித்து ஜோலார்பேட்டை இரயில்வே காவல் ஆய்வாளர் ரத்தினகுமார் மற்றும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர் அப்போது 3 வது பிளாட்பாரத்தில் வந்து நின்ற இரயில் வந்த மானவனை பத்திரமாக மீட்டனர்
அதன் பிறகு அவரது பெற்றோர்களை வரவழைத்து மாணவனை பத்திரமாக அனுப்பி வைத்தனர் அது மட்டுமன்றி ரயில்வே காவல் ஆய்வாளர் ரத்தினகுமார் மாணவனுக்கு அறிவுரை வழங்கி அனுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது
Be First to Comment