கோவை மாநகராட்சி 52 வது வார்டு கவுன்சிலரும் கோவை கிழக்கு மண்டல தலைவருமான இலக்குமி இளஞ்செல்வி தலைமையில் பீளமேடு புதூர் பகுதியிலுள்ள ஆர்.கே.மில் நகர் பகுதியில் பட்டா மாறுதல் சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது.
இந்த முகாமில்,அந்தப் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களுடைய பட்டா மாறுதல் சம்பந்தமான பல்வேறு கோரிக்கை மனுக்களை அதிகாரிகளிடம் வழங்கினர். அதனைத் தொடர்ந்து அதிகாரிகள் அந்த மனுக்கள் மீது உடனடியாக பரிசீலனை செய்து தகுதியான பொது மக்களுக்கு உரிய தீர்வு காணும் வகையில் முகாமிலேயே அவர்களுக்கு பட்டா மாறுதல் ஆணை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. தொடர்ந்து கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி தகுதியான பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் நகல்களை வழங்கினார்.

இதில், தெற்கு தாசில்தார் சரண்யா, தி.மு.க மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக், நத்தம் நிலவரி திட்டம் தாசில்தார் கல்பனா அலமேலு, துணை தாசில்தார் இளவரசி, ஆர்.ஐ.ராணி, தி.மு.க பகுதி கழக பொறுப்பாளர் பாலசுப்பிரமணியம், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் புதூர்மணி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Be First to Comment