பிரதமர் நரேந்திர மோடியின் 71 வது பிறந்தநாளை முன்னிட்டு, 12 ஆயிரம் இளம் பெண்களுக்கு மாதம்தோறும் இலவச சானிட்டரி நாப்கின் வழங்கும் துவக்க விழா கோவை காந்திபுரம் அருகே உள்ள கமலம் துரைசாமி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ வின் இந்த திட்டம் மற்றும் கோவை மக்கள் சேவை மையம் சார்பில் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ தலைமை வகித்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு, அக்டோபர் 7ம் தேதி வரை மக்களுக்கான சேவைகளை முன்னிறுத்தி பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
குறிப்பாக மகளிரணி சார்பில் நாடு தோறும் மகளிர் நலத்தை முன்னிட்டு, பெண்களுக்காக ஊட்டச்சத்து உணவு வழங்குதல், பரிசோதனை முகாம் நடத்துதல், ரத்த சோகையை போக்கும் இரும்புச்சத்து மாத்திரை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.
சிறப்பு விருந்தினராக ஷார்ப் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாக இயக்குனர் மோகனசுந்தரி கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் கோவை மாவட்ட மகளிரணி தலைவர் ஜெயதிலகா, மாவட்ட செயலாளர் மோகன சுந்தரி, ஊடகப் பிரிவின் மாநிலச் செயலாளர் சபரி கிரீஸ், ஊடகப்பிரிவு மணீஷ், மாவட்ட பிரதிநிதிகள் கண்மணி பாபு, கருமுத்து தியாகராஜன், உக்கடம் மண்டல் தலைவி தீபிகா, ஓபிசி மாவட்ட செயலாளர் சவுமியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Be First to Comment