குடிமக்களின் முக்கிய ஆதாராமாக பயன்படும் ரேஷன் கார்டுகள் ஒவ்வொரு குடும்பத்திற்கு அவசியமான ஒன்றாக உள்ளது. இதில் நாள்தோறும் புதிய ரேஷன் கார்டுகள் கேட்டு பலரும் விண்ணப்பித்து வருகின்றனர். அனைவருக்கும் விண்ணப்பித்த 15 நாட்களில் ரேஷன் கார்டுகள் வழங்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த செயல்முறையும் தொடர்ந்து வருகிறது.
புதிய ரேஷன் அட்டைதாரர்கள் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் பொருட்களை பெற்றுக்கொள்ள அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது” என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் புதிய ரேஷன் கார்டு பதிவு செய்வதற்காக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் காலை முதல் சமூக இடைவெளியின்றி மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்திட வேண்டும் என சமூக நலனில் அக்கறை கொண்டோர் கோரிக்கை வைக்கின்றனர்.

புதிய ரேஷன் கார்டு பதிவு செய்வதற்கு காத்திருக்கும் மக்கள்
More from கோவை செய்திகள்More posts in கோவை செய்திகள் »
- இந்திய ரயில்வே துறை மற்றும் தபால் துறை இணைந்து துவங்கியுள்ள, புதிய பார்சல் சேவை குறித்த ஆலோசனைக் கூட்டம் கோவை அவிநாசி சாலையில் உள்ள சேம்பர் டவர்ஸ் அரங்கில் நடைபெற்றது.
- இலவச பேருந்துகளில் வேண்டுமென்றே அரசு பெயரை கெடுக்க, 100க்கு 99 சதவீதம் தவறாக சித்தரிக்கின்றனர் – கோவையில் சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் ராஜா பேட்டி.
- விலைவாசி அதிகரிப்பை கண்டித்து, கோவையில் மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்!
- இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, விவசாயிகள் சங்கம் ஆர்ப்பட்டம்!
- காவலர் கொல்லப்பட்ட தினம், மாநகரப் பகுதியில் போலீசார் தீவிர சோதனை…!
Be First to Comment