பெரியார் பிறந்த செப்டம்பர் 17-ஆம் தேதி சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பை கொண்டாடும் விதமாக தி.மு.க கிழக்கு மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் குறிச்சி நா.பிரபாகரன் தலைமையில் குறிச்சியில் உள்ள பெரியார் சிலைக்கு தி.மு.கவினர் மாலை அணிவித்தனர். மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் குறிச்சி பகுதி பொறுப்பாளர் கார்த்திகேயன், குறிச்சி தெற்கு பகுதி பொறுப்புக்குழு உறுப்பினர் நிசார் அகமது, வட்ட பொறுப்பாளர்கள் மகாலிங்கம், சபரி பாலு, முரளி, ரமணி, நிர்வாகிகள் ஆட்டோ ராஜூ, கண்ணாமணி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் புவனேஷ் சந்திரசேகர், முரளி கிருஷ்ணன் மற்றும் திராகவிடர் கழகத்தினர் திரளாக கலந்து கொண்டனர்.

பெரியாரின் பிறந்தநாள் அறிவிப்பு குறிச்சி தி.மு.கவினர் கொண்டாட்டம்
More from கோவை செய்திகள்More posts in கோவை செய்திகள் »
- இந்திய ரயில்வே துறை மற்றும் தபால் துறை இணைந்து துவங்கியுள்ள, புதிய பார்சல் சேவை குறித்த ஆலோசனைக் கூட்டம் கோவை அவிநாசி சாலையில் உள்ள சேம்பர் டவர்ஸ் அரங்கில் நடைபெற்றது.
- இலவச பேருந்துகளில் வேண்டுமென்றே அரசு பெயரை கெடுக்க, 100க்கு 99 சதவீதம் தவறாக சித்தரிக்கின்றனர் – கோவையில் சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் ராஜா பேட்டி.
- விலைவாசி அதிகரிப்பை கண்டித்து, கோவையில் மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்!
- இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, விவசாயிகள் சங்கம் ஆர்ப்பட்டம்!
- காவலர் கொல்லப்பட்ட தினம், மாநகரப் பகுதியில் போலீசார் தீவிர சோதனை…!
Be First to Comment