Press "Enter" to skip to content

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையின் நூற்றாண்டு விழா பேரணி, குத்து டான்ஸ் போட்ட செவிலியர்கள்,அலுவலர்கள்…!

தமிழகத்தில் பொது சுகாதாரத்துறை கடந்த 1922-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் நூற்றாண்டு விழா தற்போது மாநிலம் முழுவதும் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் கடந்த 10-ந் தேதி தொடங்கி வைக்கப்பட்ட நூற்றாண்டு விழா ஜோதி, அனைத்து மாவட்டங்களுக்கும் பயணிக்கிறது. இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இந்த ஜோதி வந்தடைந்தது.

இதனை தொடர்ந்து பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில், மக்கள் சேவையில் நூற்றாண்டு விழா ஜோதியுடன் கூடிய பேரணி ஆட்சியர் அலுவலகத்தில் துவங்கியது.மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் மற்றும் மாவட்ட பொது சுகாதார துறை இயக்குனர் அருணா ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்த பேரணி, சுகாதாரம் மற்றும் மருத்துவம் குறித்த பதாகைகள் ஏந்தியபடி ரேஸ்கோர்ஸ் வரை சென்றடைந்தது. முடிவில் செவிலியர்கள் மற்றும் மருத்துவத்துறை அலுவலர்கள் இசைக்கேற்றபடி நடனமாடி நூற்றாண்டு விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.

More from கோவை செய்திகள்More posts in கோவை செய்திகள் »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications    OK No thanks