கோவை பொள்ளாச்சி பாலியல் வழக்கு கடந்த 2019ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் நிலையில் திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன், அருளானந்தம், ஹேரேன்பால், பாபு, அருண்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான வழக்கு கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதை விசாரித்த நீதிபதி, தினமும் விசாரணை நடத்தி 6 மாதத்துக்குள் வழக்கை முடிக்க உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் இன்று 9 பேரும் கோவை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.
அவர்களிடம் கூடுதல் குற்றப்பத்திரிகையை நகல் வழங்கப்பட்ட நிலையில் வழக்கை இந்த மாதம் 29ந் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி நந்தினிதேவி உத்தரவிட்டுள்ளார். இவ்வழக்கில் 9 பேரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது இதுவே முதல் முறையாகும்.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு
More from கோவை செய்திகள்More posts in கோவை செய்திகள் »
- இந்திய ரயில்வே துறை மற்றும் தபால் துறை இணைந்து துவங்கியுள்ள, புதிய பார்சல் சேவை குறித்த ஆலோசனைக் கூட்டம் கோவை அவிநாசி சாலையில் உள்ள சேம்பர் டவர்ஸ் அரங்கில் நடைபெற்றது.
- இலவச பேருந்துகளில் வேண்டுமென்றே அரசு பெயரை கெடுக்க, 100க்கு 99 சதவீதம் தவறாக சித்தரிக்கின்றனர் – கோவையில் சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் ராஜா பேட்டி.
- விலைவாசி அதிகரிப்பை கண்டித்து, கோவையில் மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்!
- இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, விவசாயிகள் சங்கம் ஆர்ப்பட்டம்!
- காவலர் கொல்லப்பட்ட தினம், மாநகரப் பகுதியில் போலீசார் தீவிர சோதனை…!
Be First to Comment