Press "Enter" to skip to content

போதை பொருள் விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயண சாதனை; கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், பொதுமக்கள், சைக்கிளர்ஸ் சைக்கிள் பயணம் மேற்கொண்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்…!

தமிழ்நாட்டில் போதை பொருள் புழக்கத்தை ஒழிக்க தமிழ்நாடு அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது . சிட்டி , புறநகர் பகுதிகளில் போலிஸார் தனிப்படை ரோந்து மூலம் போதை பொருள் விற்பனை தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். இந்த நிலையில் போதை பொருள் பழக்கத்தின் பயன்பாட்டை தடுக்க, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இந்த நிலையில் கோவையைச் சேர்ந்த விஷ்ணுராம் தனது புதிய சாதனை மூலம் “போதைப்பொருள் இல்லா தமிழகம்” எனும் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார்.

அதன்படி 1000 கிலோ மீட்டர் தூரத்தை 37 மணி நேரம் 53 நிமிடங்களில் பயணித்து சாதனை செய்துள்ளார்.
ஹைதரபாத்தில் தனது சைக்கிள் பயணத்தை துவக்கிய விஷ்ணுராம் குர்னூல், பெங்களூரு வழியாக கோவை வந்தடைந்தார். கோவை வந்த விஷ்ணுராமை கோவை மாநகர காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் வரவேற்று வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து அவருடன் ஏர்போர்ட் பகுதியிலிருந்து அவினாசி சாலை வழியாக காவல்துறை ஆணையர் அலுவலகம் வரை ஆணையர் சைக்கிள் ஓட்டிபடி வந்தார். சைகிளர்ஸ், பொதுமக்களும் சைக்கிள் ஓட்டி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இது குறித்து விஷ்ணுராம் கூறுகையில், அண்மையில் முதல்வர் கூறிய “போதைப்பொருள் இல்லா தமிழகம்” எனும் பிரச்சாரத்தை வலியுறுத்தும் விதமாக, இந்த சாதனை பயணத்தை துவங்கியதாக தெரிவித்தார். குறைந்த நேரத்தில் ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை சைக்கிள் பயணம் மூலம் கடந்த சாதனையை விஷ்ணு ராம் படைத்ததாக இண்டியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சான்றிதழ் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது..

More from கோவை செய்திகள்More posts in கோவை செய்திகள் »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications    OK No thanks