நாளை ஓணம் பண்டிகை கொண்டாட உள்ள நிலையில் கோவையில் பூக்கள் காய்கறிகள் மற்றும் பூஜை பொருட்களின் வியாபாரம் களை கட்ட தொடங்கியுள்ளது.
இதனால் பூ மார்க்கெட்டிற்கு பொதுமக்கள் அதிகம் வருகை தருவதால் கொரோனா குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் விதமாக கோவை மாநகர் மாவட்ட அனைத்து மலர் வியாபாரிகள் நல சங்கம் மற்றும் டிஸ்கோ பிளவர் டிஸ்கோ டெகரேட்டர்ஸ் சார்பாக பூ மார்க்கெட்டிற்கு வரும் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் முகக்கவசம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சங்கத்தின் தலைவர் ரவிச்சந்திரன், செயலாளர் அன்சாரி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இதில் டிஸ்கோ காஜா முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கோவை மாநகராட்சி மேற்கு மண்டல உதவி ஆணையர், பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் முக கவசங்களை வழங்கி பேசினார் அப்போது கொரானா தடுப்பு நடவடிக்கையில், மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு தருமாறும், ஒரே இடத்தில் அதிகமாக மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும், சமூக விலகலை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தினார்.
நிகழ்ச்சியில் துணை செயலாளர் சாமிதங்கம் உட்பட நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மலர் வியாபாரிகள் நல சங்கம், காஜா பிளவர் டிஸ்கோ டெக்கரேட்டர்ஸ் சார்பில் கபசுரக் குடிநீர் வழங்கும் முகாம்
More from கோவை செய்திகள்More posts in கோவை செய்திகள் »
- இந்திய ரயில்வே துறை மற்றும் தபால் துறை இணைந்து துவங்கியுள்ள, புதிய பார்சல் சேவை குறித்த ஆலோசனைக் கூட்டம் கோவை அவிநாசி சாலையில் உள்ள சேம்பர் டவர்ஸ் அரங்கில் நடைபெற்றது.
- இலவச பேருந்துகளில் வேண்டுமென்றே அரசு பெயரை கெடுக்க, 100க்கு 99 சதவீதம் தவறாக சித்தரிக்கின்றனர் – கோவையில் சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் ராஜா பேட்டி.
- விலைவாசி அதிகரிப்பை கண்டித்து, கோவையில் மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்!
- இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, விவசாயிகள் சங்கம் ஆர்ப்பட்டம்!
- காவலர் கொல்லப்பட்ட தினம், மாநகரப் பகுதியில் போலீசார் தீவிர சோதனை…!
Be First to Comment