கோவை கார் வெடி விபத்து தொடர்பாக, புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். இதைதொடர்ந்து அவர் பேசும் போது….இந்த கோவை வெடி விபத்து தொடர்பாக தமிழக அரசு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.இந்த வெடி விபத்து விவகாரத்தின் மர்மங்கள் நீடிக்கிறது. காவல்துறை இனி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவை மாநகரம் தீவிரவாதிகளின் புகலிடமாக இருக்க அவசியம் என்ன.? கோவையில் சதி செய்ய காரணம் ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் முடக்கி விட வேண்டும் என்பதே.வெடி சம்பவத்தில் ஏன் அவர்கள் கேட்பதற்கு முன்பே என்.ஐ.ஏ. விடம் ஒப்படைத்தார்கள் என்பது தெரியவில்லை.இந்த வெடி சம்பவத்தை அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் கண்டிக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு இருந்தும் யாரும் கண்டிக்கவில்லை.

முதல்வர் ஏன் இந்த சம்பவத்தை கண்டிக்கவில்லை.முதல்வர் சம்பவ இடத்திற்கு வர வேண்டும். பாதுகாப்பு உத்திரவாதத்தை அளிக்க வேண்டும். முதல்வரின் மௌனம் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. மக்கள் அச்சத்தோடு வாழ்ந்தால் அது ஜனநாயக நாடு ஆகாது. தீவிரவாதத்திற்கு எதிராக வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். காவல் நிலையங்களை அதிகரித்து என்ன பிரயோஜனம்.? காவல்துறையினரை சுதந்திரமாக செயல்பட வைக்க வேண்டும். கோவையில் தமிழக அரசால் ஆன்ட்டி டெரரிஸ் ஸ்கோட் அமைக்கபட வேண்டும். உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் கோவையில் சம்பவங்கள் நடக்க காரணம் என்ன என்பது குறித்து கமிஷன் அமைக்க வேண்டும். மாநில சுயாட்சி பேசும் நீங்கள் ஏன் என்.ஐ.ஏ.,விடம் வழக்கை கொடுத்தீர்கள்..?.வெடித்த சிலிண்டரை ஏன் காண்பிக்க மாட்டீங்கிரீர்கள்.? இதை வாக்காக பார்த்தால் ஆபத்து.

காவல்துறை வெளிப்படையாக இருக்க வேண்டும்.சிலிண்டரின் விவரம் வெளியிட வேண்டும்.?அமைச்சர் அன்று ஏன் வரவில்லை. ஐந்து நாள் கழித்து வந்து பேச என்ன காரணம். ஜமாத் தலைவர்கள் கருத்து தெரிவித்தது வரவேற்புக்குறியது என தெரிவித்தார்.
Be First to Comment