கோவை போத்தனூருக்கும் மதுக்கரை க்கும் இடையே ரயில்வே தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். அப்போது அந்த வழியாக வந்தவர்கள் உடனே போத்தனூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு தகவல் அளித்தனர். தகவலின்பேரில் போத்தனூர் ரயில்வே போலீசார் சப் – இன்ஸ்பெக்டர் தர்மராஜ் மற்றும் போலீசார் திருநாவுக்கரசு ஆகியோர் சம்பவ இடத்துக்கு உடனே விரைந்து சென்று இறந்து கிடந்த அந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் .மேலும் இறந்து கிடந்த அந்த வாலிபருக்கு சுமார் 25 வயது இருக்கும். ரெட் கலர் டி-ஷர்ட் அணிந்திருந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் ,போத்தனூர் ரயில்வே போலீசார் அந்தப் பகுதியில் விசாரித்து வருகின்றனர்.

ரயிலில் அடிபட்டு இளம் வாலிபர் சாவு போலீசார் விசாரணை.
More from கோவை செய்திகள்More posts in கோவை செய்திகள் »
- இந்திய ரயில்வே துறை மற்றும் தபால் துறை இணைந்து துவங்கியுள்ள, புதிய பார்சல் சேவை குறித்த ஆலோசனைக் கூட்டம் கோவை அவிநாசி சாலையில் உள்ள சேம்பர் டவர்ஸ் அரங்கில் நடைபெற்றது.
- இலவச பேருந்துகளில் வேண்டுமென்றே அரசு பெயரை கெடுக்க, 100க்கு 99 சதவீதம் தவறாக சித்தரிக்கின்றனர் – கோவையில் சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் ராஜா பேட்டி.
- விலைவாசி அதிகரிப்பை கண்டித்து, கோவையில் மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்!
- இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, விவசாயிகள் சங்கம் ஆர்ப்பட்டம்!
- காவலர் கொல்லப்பட்ட தினம், மாநகரப் பகுதியில் போலீசார் தீவிர சோதனை…!
Be First to Comment