ரவுண்ட் டேபிள் ஆப் இந்தியா ஒரு தனித்துவமிக்க, 18 முதல் 40 வயது இளைஞர்களைக் கொண்ட, சமுதாய அமைப்பாகும்.
ரவுண்ட் டேபிள் ஆப் பகுதி தலைவர் ஆர். விஷ்ணு பிரபாகர் வார விழாவை துவக்கி வைத்தார்.
இந்த அமைப்பி்ன் முக்கிய நோக்கமான கல்வி வழியில் சுதந்திரம் என்ற திட்டம் பற்றி விளக்கினார். “இந்த திட்டத்தில் நாடு முழுவதும் ரு.275 கோடி செலவில், 3139 பள்ளிகளில் 7505 வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.
இந்த வகுப்பறைகளால் 7.9 மில்லியன் குழந்தைகள் பயன்பெற்றுள்ளனர்.
கடந்த 20 ஆண்டுகளில் சராசரியாக ஒவ்வொரு நாளும் 1 வகுப்பறை வீதம் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த ரவுண்ட் டேபிள் வார விழா, பகுதி 7 ல் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், குன்னுார், ஊட்டி, பொள்ளாச்சி, கருர், பாலக்காடு, கோழிககோடு, கண்ணனுார் மற்றும் வயநாடு ஆகிய மையங்கள் உள்ளன.
இந்த ஆண்டு, மக்களை இணைப்போம் மற்றும் முடிந்ததை உருவாக்குவோம் ” என்ற கருத்துரு உருவாக்கப்பட்டுள்ளது.
Be First to Comment