பொள்ளாச்சி நகராட்சி பொது வரி சீராய்வில் மறுபரிசீலனை செய்திட வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாவட்டச் செயலாளர் நித்தியானந்தன், கவுன்சிலர் சாந்தலிங்கம் உள்ளிட்டோர் பொள்ளாச்சி நகராட்சி ஆணையாளர் தாணுமூர்த்தி மற்றும் நகராட்சித் தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் ஆகியோரை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றைக் கொடுத்தனர்.
அதில், பொள்ளாச்சி நகராட்சியில் கடந்த 1998ம் ஆண்டு நடந்த அப்போதைய நகராட்சித் தலைவரால் நகரமன்றத்தில் தீர்மானிக்கப்பட்ட பொது வரி சீராய்வில் உச்சபட்ச வரித்தொகை நிர்ணயம் செய்து பொது மக்களுக்கு சொத்து வரி நிர்ணயம் செய்யப்பட்டது. அப்போது மற்ற நகராட்சியில் உள்ள சொத்துவரியைக் காட்டிலும் பல மடங்கு அதிகமாக பொள்ளாச்சி நகராட்சியில் சொத்துவரி நிர்ணயம் செய்யப்பட்டது. அதனால் பொது மக்களும், வியாபார, வணிக நிறுவனங்களைச் சேர்ந்த உரிமையாளர்களும், சொத்து வரி உயர்வால் மிகுந்த அவதிக்குள்ளாகினர். தற்சமயமும் பொள்ளாச்சி நகராட்சியில் தான் சொத்து வரி அதிகமாக உள்ளது. எனவே தற்சமயம் நடைபெற உள்ள பொதுவரி சீராய்வை மறுபரிசீலனை செய்து பொதுமக்களுக்கும் வியாபாரிகளுக்கும் உதவிட வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வரி சீராய்வில் மறுபரிசீலனை கொ.ம.தே.க. கோரிக்கை
More from கோவை செய்திகள்More posts in கோவை செய்திகள் »
- இந்திய ரயில்வே துறை மற்றும் தபால் துறை இணைந்து துவங்கியுள்ள, புதிய பார்சல் சேவை குறித்த ஆலோசனைக் கூட்டம் கோவை அவிநாசி சாலையில் உள்ள சேம்பர் டவர்ஸ் அரங்கில் நடைபெற்றது.
- இலவச பேருந்துகளில் வேண்டுமென்றே அரசு பெயரை கெடுக்க, 100க்கு 99 சதவீதம் தவறாக சித்தரிக்கின்றனர் – கோவையில் சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் ராஜா பேட்டி.
- விலைவாசி அதிகரிப்பை கண்டித்து, கோவையில் மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்!
- இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, விவசாயிகள் சங்கம் ஆர்ப்பட்டம்!
- காவலர் கொல்லப்பட்ட தினம், மாநகரப் பகுதியில் போலீசார் தீவிர சோதனை…!
Be First to Comment