அரசியல் கட்சியினரைப்போல் பயன்படுத்திய வாட்டர் பாட்டில்களை வீசி எறிந்து செல்லாமல் எடுத்துச்சென்ற விவசாயிகள் !!!
கோவை மாவட்டம் அன்னூர் தாலுக்கா அலுவலகம் முன்பு விவசாயி கோபால் சாமியை தாக்கிய ஒட்டர்பாளையம் வி.ஏ.ஓ கலைச்செல்வியின் உதவியாளர் முத்துச்சாமியை கைது செய்ய வலியுறுத்தி இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்கம்,கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம்,உழவர் உழைப்பாளர் கட்சி,அவினாசி-அத்திக்கடவு திட்ட போராட்டக்குழு உள்ளிட்ட பல்வேறு விவசாய அமைப்புகளை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் விவசாயி கோபால்சாமியை தாக்கிய முத்துச்சாமி,அதிகாரிகளுக்கு தகவல் அளித்த வி.ஏ.ஓ கலைச்செல்வி உள்ளிட்டோரை கைது செய்யவும்,நிரந்த பணி நீக்கம் செய்யவும்,பொய் வழக்கு பதியப்பட்ட விவசாயி மீதான வழக்கினை வாபஸ் பெற வலியுறுத்தியும் கோஷங் கள் எழுப்பப்பட்டன.மேலும்,மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங களும் நிறைவேற்றப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்காக பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டது.அரசியல் கட்சிகள் கலந்து கொள்ளும் போராட்டங்களின் போது பயன்படுத்திய குடிநீர் பாட்டில்களை ஆங்காங்கே வீசி விட்டு செல்வர்.
அவர்களைப்போல் இல்லாமல் பயன்படுத்தி தூக்கி வீசப்பட்ட வாட்டர் பாட்டில்களை விவசாயிகளே எடுத்து சென்றது பொதுமக்களிடையே வியப்பை ஏற்படுத்தியது.
Be First to Comment