விநாயகர் சதுர்த்தி வந்தாலே சிறுவர்களுக்கு கொண்டாட்டதான். புத்தம் புது களிமண்ணால் செய்த பிள்ளையார்களை அலங்கரித்து எடுத்துக் கொண்டு தட்டில் பிள்ளையார் பாடல்களைப் பாடி உற்சாகத்துடன் வலம் வந்தனர். கணபதி ஜே… ஜே… என்ற பாடல்கள் வீதிகள் தோறும் எதிரொலித்தன.
களிமண்ணில் செய்யப்பட்ட சின்னச் சின்ன பிள்ளையார்களை எடுத்துக்கொண்டு பாடல்களைப் பாடியபடி பிள்ளைகள் வலம் வந்தது கண்கொள்ளா காட்சியாக இருந்தது.
வீடுகளில் செய்யப்பட்ட கொழுக்கட்டைகள், கடைகளில் வாங்கிய கடலை பொரி, தேங்காய் பழம் வைத்து வழிபட்டனர். இதில் விசேஷம் என்னவென்றால் மேட்டூர் பகுதியில் பொது மக்கள் சார்பில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி திருவிழா விழாவில் சுமார் 3 1/2 வயது குழந்தை சத்ரபதி யாபேஷ் சென்றததுதான். விநாயகர் வைக்கப்பட்ட இடத்திலிருந்து குறிச்சி குளக்கரைக்கு சுமார் 3 கிலோமீட்டர் பிள்ளையாரை கையில் ஏந்தியபடி நடந்தே சென்று விநாயகர் கரைத்தான்.
சிறுவனின் செயல் பக்தர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது மட்டுமல்ல சிறுவனின் ஆன்மிக பற்றை பக்தர்கள் பாராட்டினர்.

விநாயகர் சதுர்த்தி அசத்திய சிறுவன்
More from கோவை செய்திகள்More posts in கோவை செய்திகள் »
- இந்திய ரயில்வே துறை மற்றும் தபால் துறை இணைந்து துவங்கியுள்ள, புதிய பார்சல் சேவை குறித்த ஆலோசனைக் கூட்டம் கோவை அவிநாசி சாலையில் உள்ள சேம்பர் டவர்ஸ் அரங்கில் நடைபெற்றது.
- இலவச பேருந்துகளில் வேண்டுமென்றே அரசு பெயரை கெடுக்க, 100க்கு 99 சதவீதம் தவறாக சித்தரிக்கின்றனர் – கோவையில் சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் ராஜா பேட்டி.
- விலைவாசி அதிகரிப்பை கண்டித்து, கோவையில் மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்!
- இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, விவசாயிகள் சங்கம் ஆர்ப்பட்டம்!
- காவலர் கொல்லப்பட்ட தினம், மாநகரப் பகுதியில் போலீசார் தீவிர சோதனை…!
Be First to Comment