கொரோனா தொற்று பரவல் காரணமாக கோவை மாவட்டத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும் வழிபாட்டுத் தலங்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது.
இந்த சூழலில், ஹிந்து மக்கள் புரட்சி படை அமைப்பினர் சிவபெருமான் வேடமணிந்து விநாயகர் சிலையை ஏந்தியவாறு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து மனு அளித்தனர்.அம்மனுவில்
தமிழகத்தில் கொரோனா தற்போது படிப்படியாக குறைந்து வருவதால் விநாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பிக்கும் வகையில் இந்து சமய திருக்கோவில்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் எவ்விதத் தடையும் இல்லாமல் வழிபாடு நடத்த அனுமதிக்க கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் அவ்வமைப்பின் மாநிலத் தலைவர் பீமா பாண்டி,மாநில அமைப்பாளர் கண்ணன், மாநில பொதுச்செயலாளர் சிவா
மாவட்ட செயலாளர் ரிங் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விநாயகர் சதுர்த்தி விழா அனுமதிக்கோரி சிவபெருமான் வேடமணிந்து மனு
More from கோவை செய்திகள்More posts in கோவை செய்திகள் »
- இந்திய ரயில்வே துறை மற்றும் தபால் துறை இணைந்து துவங்கியுள்ள, புதிய பார்சல் சேவை குறித்த ஆலோசனைக் கூட்டம் கோவை அவிநாசி சாலையில் உள்ள சேம்பர் டவர்ஸ் அரங்கில் நடைபெற்றது.
- இலவச பேருந்துகளில் வேண்டுமென்றே அரசு பெயரை கெடுக்க, 100க்கு 99 சதவீதம் தவறாக சித்தரிக்கின்றனர் – கோவையில் சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் ராஜா பேட்டி.
- விலைவாசி அதிகரிப்பை கண்டித்து, கோவையில் மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்!
- இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு, விவசாயிகள் சங்கம் ஆர்ப்பட்டம்!
- காவலர் கொல்லப்பட்ட தினம், மாநகரப் பகுதியில் போலீசார் தீவிர சோதனை…!
Be First to Comment