கோவை சுங்கம் பகுதியில் உள்ள இந்தியா விமானப்படை பயிற்சி கல்லூயில் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் விமானப்படை அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த மாதம் 15 ஆம் தேதி பல்வேறு மாநிலங்களில் இருந்து 30 அதிகாரிகள் பயிற்சிக்காக கோவையில் உள்ள விமானப்படை பயிற்சி கல்லூரிக்கு வந்துள்ளனர். பயிற்சிக்கு வந்த பெண் விமான படை அதிகாரி ஒருவர் கடந்த 10 தேதி தனது அறையில் மாத்திரை, மருந்து எடுத்துக் கொண்டு, ஓய்வெடுத்த போது, அங்கு பயிற்சிக்கு வந்த லெப்டினல் அமிர்தேஷ் என்ற விமானபடை அதிகாரி, பெண் அதிகாரியை பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி கோவை காந்திபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
கோவை விமான படை கல்லூரியில் (IAFC) பயிற்சியில் இருந்த லெப்டினல் அமிர்தேஷ் என்ற விமானப்படை அதிகாரியை கோவை காவல் துறையினர் கைது செய்து நேற்று இரவு அதிகாரி நீதிபதி இல்லத்திற்கு அழைத்து செல்லப்பட்டு ஆஜர் செய்யப்பட்டார். விமான படை அதிகாரி மீது கோவை காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க முடியாது என அமிர்தேஷ் தரப்பு வழக்கறிஞர் அபிடவிட் தாக்கல் செய்தார்.
கோவை காவல் துறை பதில் அபிடவிட் தாக்கல் செய்ய அவகாசம் கேட்ட நிலையில், விமானபடை அதிகாரி லெப்டினல் அமிர்தேஷை ஓரு நாள் மட்டும் ரிமாண்ட் செய்ய நீதிபதி உத்திரவு பிறப்பித்துள்ளார். இதனையடுத்து லெப்டினல் அமிர்தேஷை உடுமலை கிளை சிறையில் போலீசார் அடைத்தனர். மேலும் காவல்துறையினர் கூறும்போது லெப்டினல் அமிதேஷ் மீது 376 என் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் நாளை நீதிமன்ற உத்தரவுப்படி வழக்கின் தன்மை இருக்கும் என தெரிவித்தனர்.
Be First to Comment